onlne

Tuesday, November 8, 2011

அட்ரீனோ கிராபிக் பிராசஸருடன் புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்

புதிய புதிய மொபைல்களை வழங்குவதைவிட, அந்த புதிய மொபைல்களில் என்ன புதிய தொழில் நுட்பத்தினை வழங்கலாம் என்று யோசித்து செயல்பட்டு வருகிறது மோட்டோரோலா மொபைல். எக்ஸ்டி-319 என்ற மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது இந்நிறுவனம். 

ஆன்ட்ராய்டு 2.3.4 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்கும் இந்த மொபைலின் திரை 320 X 480 பிக்ஸல் துல்லியத்தை கொண்டது. 

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க 800 எம்எச்இசட் சிங்கிள் கோர் எம்எஸ்எம்7227டி-1 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட் மொபைலில் பிக்சர்ஐடி மற்றும் ரிங்டோன் ஐடி சவுகரியமும் உள்ளது. இதில் உள்ள 0.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்புக் கேமராவின் மூலம் வீடியோ சாட் வசதியினைப் பெற முடியும். 

அதோடு இதில் மற்றுமொரு 3 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. இதனால் ஏராளமாக புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் எடுக்கலாம். 

அட்ரினோ 200 கிராஃபிகஸ் பிராசஸர், இதன் சிறப்பு என்று கூறலாம். இது மைக்ரோஎஸ்டி மற்றும் மைக்ரோஎச்எஸ்டி ஸ்லாட்டுகளை கொண்டிருப்பதால் சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளும் சவுகரியத்தையும் கொண்டது.

இதன் ஸ்டோரேஜ் வசதியினை 32ஜிபி வரை விரிவுபடுத்தலாம். 512எம்பி ரோம் மற்றும் 512எம்பி ரேம் வசதியும் இதில் உள்ளது. 

Sunday, November 6, 2011

அனைத்து வசதிகளுடன் மலிவு விலையில் மேக்ஸ் மொபைல்

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மொபைல் உலகில், சிறந்த மொபைல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது இந்திய நிறுவனமான மேக்ஸ். அதோடு நீடித்து உழைக்கும் பேட்டரியையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது மேக்ஸ். 

வெயில் காலம், மழைக் காலம் என்பது போல இது டச் ஸ்கிரீன் மொபைல் காலம் என்று கூறலாம். ஏனெனில் வாடிக்கையாளர்கள் அதிகமான தொடுதிரை தொழில் நுட்பம் கொண்ட மொபைல்களை விரும்புகின்றனர். 

இதனால் ஒவ்வொரு நிறுவனமும் நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்த ரக மொபைல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் டச் ஸ்கிரீன் மொபைல்களுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. 

இந்த சமயத்தில் மற்ற மொபைல்களுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு ஸிப்பி எம்டி-105 என்ற டச் ஸ்கிரீன் மொபைலை நேற்று வெளியிட்டிருக்கிறது மேக்ஸ் நிறுவனம்.

இரண்டு சிம் நெட்வொர்குகளை ஆப்பரேட் செய்ய இதில் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2.4 இஞ்ச் திரை கொண்ட ட்எப்டி ஃபுல் டச் ஸ்கிரீன் மொபைல் மூலம் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்திய சந்தோஷத்தையும், வெற்றியையும் கொண்டாட காத்திருக்கிறது மேக்ஸ். 

இந்த எம்டி-105 மொபைலில் நிறைய மல்டிமீடியா வசதியும் உள்ளது. ப்லெய்ன் ப்ளாக் வித் புளூ, மெட்டாலிக் ரெட் மற்றும் ஃபன்க்கி ஆரன்ச் போன்ற கண்கவரும் நிறங்களிலும் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீடியோ ரெக்காரடிங், டிஜிட்டல் சூம் வசதி கொண்ட இதன் கேமரா 640 X 480 பிக்ஸல் துல்லியத்தை வழங்குகிறது. இதில் உள்ள பிஏடி05 பேட்டரி 3 இருந்து 4 மணி நேரம் டாக் டைமையும் மற்றும் , 400 இருந்து 450 மணி நேரம் வரை ஸ்டான்-பை டைமையும் வழங்குகிறது.

115கேபி இன்டர்னல் மெமரியும், 64 எம்பி சிஸ்டம் மெமரியும் இதில் பயன்படுத்த முடியும்.

இதன் எக்ஸ்டர்னல் மெமரி கார்டு வசதியினை 4ஜிபி வரையில் விரிவுபடுத்திக் கொள்ளலாம். மியூசிக், வீடியோ ப்ளேயர் ஃபார்மெட்டுகளுக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் புளூடூத், ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பத்திற்கும் உதவுகிறது. 

அதோடு இந்த மொபைலில் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் டைப் செய்ய சப்போர்ட் செய்கிறது.ஃபுல் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட மேக்ஸ் எம்டி-105 மொபைல் ரூ.2,550 விலையை ஒட்டி கிடைக்கிறது

Thursday, November 3, 2011

சிறுவர்களுக்காக வரும் புதிய மொபைல்போன்: பேஸிக் அறிமுகப்படுத்துகிறது

அட! குழந்தைகளிடம் இருந்து மொபைலை பாதுகாத்துக் கொண்டிருப்பதிலேயே பாதிநேரம் செலவாகிறதா? மொபைலில் உள்ள பேட்டரியை கேம் விளையாடியே தீர்த்துவிடுகிறார்களா? 

இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ பிரச்சனைக்குத் தீர்வு இருக்கும்பொழுது இது ஒரு பிரச்சனையா!? 

மதி நுட்பம் வாய்ந்த நமது தொழில் நுட்ப நிபுணர்கள் இதற்கு ஒரு அருமையான தீர்வை கண்டுபிடித்திருக்கிறார்கள். இமினி என்ற புதிய மியூசிக் மொபைலை பேசிக் நிறுவனம் அறிமும் செய்திருக்கிறது. இது அடிப்படையில் கொரியன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம். 

இந்த மொபைல் நவம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும். இந்த இமினி மொபைல் ஒரு மியூசிக் மொபைல்போன். இது குழந்தைகள் இசை கேட்டு மகிழ்வதற்காகவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 

சிறியவர்களாகிய குழந்தைகளின் பிஞ்சு விரல்களுக்கு ஏற்ற வகையில் இந்த மொபைல் குட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், கைக்கு கச்சிதமாக இருக்கும். கையில் ஒரு கைக்குட்டை வைத்திருப்பதும், இந்த மொபைலை வைத்திருப்பதும் ஒன்றுதான் என்பதை இந்த மொபைலை பயன்படுத்தும் பொழுது தெரியும். 

குழந்தைகளுக்கு மொபைலா? என்ற எண்ணமே தேவையில்லை. அதோடு குழந்தைகள் இசை கேட்பது மனதிற்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என்று நிறைய விஞ்ஞான மருத்துவர்களும் கூறியிருப்பதைக் கேட்டிருப்பீர்கள். 

ஆகையினாலே இந்த இமினி மியூசிக் போன் குழந்தைகளுக்கு ஏற்ற பயனைத் தரும். இந்த குட்டி மொபைல் வெறும் 40 கிராம் எடை கொண்டதால் கணம் இருக்காது, எளிதாக கையாளலாம்.

இமினிமொபைலின் திரையை உங்கள் கட்டை விரல் கொண்டு எளிதாக மறைத்துவிட முடியும். அத்தகைய குட்டித் திரையை கொண்டுள்ளது. ஆனால் குழந்தைகளின் கண்களுக்கு இந்த திரை அளவு போதுமானது. 

மியூசிக் வசதி மட்டும்தானா என்று நினைத்துவிடாதீர்கள். இன்னும் பல ஆச்சர்யமூட்டும் அரிய வசதிகள் காத்திருக்கிறது. 

இதில் உள்ள 1ஜிபி மெமரி வசதியின் மூலம் தேவையான பாடல்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அதே சமயம் எப்எம் ரேடியோவில் உள்ள இசையையும் கூடுதலாகக் கேட்டு மகிழ முடியும். 

ஸ்டீரியோ ஹெட்செட், அலாரம், வைப்ரேஷன், ரிங் டோன் போன்ற வசதிளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதற்கே இப்படி திகைத்துவிட்டால் இன்னும் மீதியையும் கேட்டால் இன்றே இந்த மொபைலை கண்கள் தேட ஆரம்பித்துவிடும். இந்த இமினி மொபைல் டியூவல் சிம் போன் வசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இதை கேட்டால் அட! இந்த குட்டி மொபைலுக்குள் சுட்டிகளின் குட்டி உலகமே இயங்குவது புரியும். இ-மெயில், மியூசிக் ப்ளேயர் போன்ற வசதிகளைப் பெற தனிப்பட்ட பட்டன்கள் உள்ளது. இதனால் மிக சுலபமாக இந்த வசதிகளை இயக்க முடியும். 

இமினி 400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அளவான டாக் டைம் மற்றும் ஸ்டான்பை-டைமை வழங்குகிறது. 

குழந்தைகளின் உலகத்திற்குள் நுழைய புதிய அவதாரம் எடுத்திருக்கும் இந்த இமினி மியூசிக் மொபைல் ரூ.3,400 விலை கொண்டது. இதில் இன்னொரு வெர்ஷனும் உருவாக்கப்பட்டிருக்கிறது அதன் விலை ரூ.3,900. 

வரப்போகும் கிரிஸ்மஸ் பண்டிகைக்கு குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசாக பேஸிக் இமினி மியூசிக் மொபைல்போன் இருக்கும் என்று தோன்றுகிறது.

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...