onlne

Monday, October 31, 2011

4.3 இஞ்ச் திரையுடன் வரும் புதிய ஹைவேரியண்ட் ஸ்மார்ட்போன்


நாளுக்கு நாள் அதிகரிக்கும் மொபைல் போட்டியை சொல்ல வார்த்தைகளே இல்லை. அதே போல் மக்களுக்கு மொபைல் மேல் உள்ள மோகமும் குறையவில்லை. 

இதனால் புதிய புதிய நிறுவனங்களும் அதி நுட்ப சேவைகளை வழங்கும் வகையில் மொபைல்களைக் உருவாக்கித் தருகின்றது. 

எந்த எந்த வகையில் வாடிக்கையாளர்கள் வேலையை எளிதாக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்கள் என்பதையும் புரிந்து கொண்டு, அதற்கேற்ப சவுகரியங்களை அனைத்து நிறுவனங்களும் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. 

வின்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் எக்ஸ்பி போன்-2 மொபைலை வெளியிட திட்டமிட்டுள்ளது ஐடிஜி நிறுவனம். இந்த மொபைலுடைய சிறப்பு என்னவென்றால் இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்கும் ஸ்மார்ட் மொபைல். இந்த மொபைல் 4.3 இஞ்ச் அகன்ற திரையை கொண்டது. 

இது லெட் தொழில் நுட்பத்தையும், தொடுதிரை வசதியையும் சேர்த்துக் கொடுக்கிறது. ஐடிஜி நிறுவனம் எக்ஸ்பி போன்-2 என்ற தனது இரண்டாவது படைப்பை பந்தையத்தில் இறக்க உள்ளது. இந்த மொபைல் மக்களுக்கு பிடிக்கும் லேட்டஸ்டு மாடல் என்று கூறலாம். 

இதன் தனித்துவத்தை வடிவமைப்பிலேயே காட்டிவிடுகிறது இந்த புதிய மொபைல். எக்ஸ்பிபோன்2 மொபைல் 1.6 ஜிஎச்இசட் பிராசஸர் துணை கொண்டது. இந்த பிராசஸர் மூலம், விண்டோஸ் 8 ஓஎஸ் எளிதாக இயங்க முடியும். ஏனென்றால் இதில் அதி நவீன தொழில் நுட்பங்கள் பயண்படுத்தப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட் மொபைல் என்றாலே அனைத்து வகையிலும் சவுகரியத்தைக் கொடுக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள். இதை மனதில் கொண்டு டைப் செய்வதில் கூட கியூவர்டி கீப்பேட் வசதியினை அளித்திருக்கிறது இந்நிறுவனம். 

இந்த மொபைல் அதிக மெமரி வசதியைக் கொண்டுள்ளது. இதில் உள்ள மெமரி வசதியை 112 ஜிபி வரை வேண்டுமானலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம். இன்றைய தேதியில், அசர வைக்கும் மெமரி வசதி கொண்ட ஸ்மார்ட் மொபைல் இதுவே என்று கூறலாம். 

இத்தனை வசதிகளையும் தெரிந்த பின்பு மக்களின் ஆர்வம் பேட்டரியின் தறத்தை நோக்கி செல்லும் என்பதும் புரிகிறது. 13 மணி நேரத்திற்கு குறைவில்லாமல் டாக் டைமை பெற முடியும். இந்த வசதி வாடிக்கையாளர்கள் எதிர் பார்க்கும் ஒரு முக்கிய தேவை. அதோடு 5 நாட்களுக்கு தொடர்ந்து ஸ்மான்-பை டைமும் அளிக்கிறது எக்ஸ்பிபோன்-2 மொபைல். 

இந்த புதிய மொபைலின் பல முக்கிய அம்சங்கள் இன்னும் வெளிடப்படாமல் ரகசியமாகவே உள்ளது. இதன் கேமரா வசதி பற்றி தகவல்களைக் கூட வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது இந்நிறுவனம். 

விண்டோஸ் 8 ஓஎஸ் போன்ற உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட இந்த மொபைல் அனைத்து வசதிகளின் அடிப்படையிலும், சிறப்பான விஷயங்களையே மக்களுக்கு அளிக்கும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

Thursday, October 20, 2011

ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட புதிய சாம்சங் டிரான்ஸ்ஃபிக்ஸ் மொபைல்

டிரான்ஸ்ஃபிக்ஸ் என்ற ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் மொபைலில் சிங்கில் கோர் கியூவல்காம் ஏஆர்எம் 9 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது 800 மெகாஹெர்ட்ஸ் செயல் வேகம் கொண்டது. இந்த புதிய மொபைல் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர்களுக்கு சப்போர்ட் செய்கிறது. இதில் யூடியூப் ப்ளேயர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 3.2 இஞ்ச் திரை வசதி கொண்டது. 320 X 480 பிக்ஸல் திரை வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மெமரி ஸ்டோரேஜ் வசதியை 125 எம்பி வரை வேண்டுமானாலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம். அதிகமான மெமரி வசதி உள்ளதால் அதிக அளவு தகவல்களையும் பதிவு செய்ய முடியும். இந்த ஸ்மார்ட்மொபைலில் ஜிபிஎஸ் நேவிகேஷன் தொழில் நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு இந்த மொபைல் வெறும் 125 கிராம் இலகு எடை கொண்டது.

சாம்சங் டிரான்ஸ்ஃபிக்ஸ் மொபைலில் நெட்வொர்க் வசதிக்காக வைபையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு புளூடூத் மற்றும் யூஎஸ்பி 2.0 போர்ட் வசதியும் உள்ளதால் தகவல் பரிமாற்றமும், தகவல்கள் பதிவேற்றமும் எளிதாக நிகழ்த்தலாம்.அனைவரும் எதிர் பார்க்கின்ற 3ஜி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது வெப் அப்ளிக்கேஷன் கொண்ட ஸ்மார்ட் மொபைலாகும். 1,500 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 3 மணி நேரம் டாக் டைமும், 200 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கிடைக்கிறது. சாம்சங் டிரான்ஸ்பிக்ஸ் மொபைல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும்பொழுது ரூ.9,000 விலையை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Sunday, October 16, 2011

பட்டையை கிளப்பும் இரட்டை திரையுடன் வரும் சாம்சங் ஆன்ட்ராய்டு மொபைல்





டபுள்டைம்என்ற புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். இதன் புதிய வசதிகள் வாடிக்கையாளர்களின் கண்களை விரிய வைக்கும் அளவு, சிறந்த தொழில் நுட்பங்கள் கொண்டது. டபுள்டைம்என்ற பெயர் இந்த மொபைலுக்கு பொருத்தமானது. ஏனென்றால் இதில் டபுல் சந்தோஷத்தைக் கொடுக்கும் க்ளாம்ஷெல் டியூவல் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைலில் 3.20 இஞ்ச் கொண்ட திரை ஒன்றும், மற்றொரு 3.02 இஞ்ச் கொண்ட தொடுதிரையும் கொடுக்கப்பட்டுள்ளது. இது 480 X 320 பிக்ஸல் துல்லியத்தையும் கொடுக்கிறது. அதோடு டைப் செய்வதற்கு எளிய வகையில் கியூவர்டிக் கீபேட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த டபுள்டைம்மொபைல் வெர்ஷன் 2.2 கொண்ட, ஆன்ட்ராய்டு 2.2 பிளாட்ஃபார்மில் இயங்குகிறது. 600 எம்எச்இசட் சிங்கில் கோர் பிராசஸர், ஆன்ட்ராய்டு பிளாட்ஃபார்ம் இயங்க உதவுகிறது. இந்த மொபைலில் 3.2 மெகா பிக்ஸல் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

260 எம்பி கொண்ட இன்டர்னல் மெமரி இருப்பதால் தேவையான தகவல்களை இதில் பதிவு செய்து கொள்ள முடியும். மைக்ரோஎஸ்டி மற்றும் மைக்ரோஎஸ்டிஎச்சி எக்ஸ்டர்னல் வசதியும் உள்ளது. இப்படி புதுமையான தொழில் நுட்பம் கொண்ட இந்த சாம்சங் டபுள்டைம்மொபைலின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


Sunday, October 9, 2011

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியாவின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம்

மலிவான விலையில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனைகளை நோக்கியா விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

எஸ்-40 பிளாட்பார்மில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான தொழில்நுட்ப வசதிகளை நோக்கியா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் மெல்டெமி என்ற பெயரில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நோக்கியா உருவாக்கி உள்ளது.

ரூ.5,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த நோக்கியா திட்டமிட்டு இருக்கிறது. இந்த புதிய மெல்டெமி ஆப்பரேட்டிங் சிஸ்டம் லினக்ஸ் சாப்ட்வேர் ப்ளாட்ஃபார்மில் இயங்கும் வகையில் வடிவைக்கப்பட்டுள்ளது.

நோக்கியாவின் இந்த குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட் மொபைல் சிறந்த விற்பனையைக் கொடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுவதாக இந்நிறுவனத்தின் உயர் அதிகாரியான மேரி மெக்டோனல் தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு நிறுவனங்கள் மார்க்கெட்டில் பட்ஜெட் விலை போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருவதால் நோக்கியா போன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் செக்மெண்ட்டில் நெருக்கடியை குறைத்துக்கொள்ள முடியும் என்று நோக்கியா கருதுகிறது.

மெல்டெமி ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட நோக்கியாவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் ரூ.5,000 விலைக்குள் மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, October 5, 2011

ஆன்ட்ராய்டு போன்களுக்கான புதிய மியூசிக் ப்ளேயர்



ஆன்ட்ராய்டு போன்களை விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இப்பொழுது இன்னொரு கூடுதல் வசதியும் கிடைக்க உள்ளது. ஜாம்காஸ்ட் எனும் மியூசிக் ப்ளேயர் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு காம்டெக்ஸ் அப்ளிக்கேஷன்.

இதன் மூலம் மியூசிக் அப்ளிக்கேஷன்களை ஆன்ட்ராய்டு 2.1 வெர்ஷன் மொபைல்களில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த வசதி இசை விரும்பிகளுக்கு ஒரு சிறந்த விருந்தாக இருக்கும். ஆன்ட்ராய்டு 2.1+ வெர்ஷன் போன்களில் உள்ள 3ஜி, 4ஜி மற்றும் வைபை வசதியின் மூலம் இந்த மியூசிக் அப்ளிகேஷன்களை எளிதாக டவுன்லோட் செய்ய முடியும்.

சாஃப்ட்வேர் டெவெலப்மென்ட் சொல்யூஷன் நிறுவனத்தின் உயர் அதிகாரியான ஸ்காட் ஸ்ட்ரீக்கர் இந்த மியூசிக் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தினார். இதில் காரில் டாக் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. இந்த சாஃப்ட்வேரை மிகவும் எளிதாக இணைக்க முடியும்.

இந்த புதிய மியூசிக் ப்ளேயரை http://getjamcast.com என்ற இணையத்தளத்தில் இருந்து மிக எளிதான முறையில் டவுண்லோடு செய்யலாம். இதன் ட்ரையல் வெர்ஷன் சாப்ட்வேரை ரூ.1,000 விலையில் 14 நாட்கள் செல்லுபடியாகத்தக்க வகையில் டவுண்லோடு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...