onlne

Thursday, September 29, 2011

பட்டையை கிளப்பும் வளையும் தன்மை கொண்ட பேனல் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்!



ஸ்கின் என்ற பெயரில் புதிய மொபைலை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். கிராபின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மொபைல்போனின் பேனல் வளைந்து, நெளியும் தன்மை கொண்டது. கீழே விழுந்தாலும் உடையாது.

எதிர்கால தொழில்நுட்ப வசதிகொண்ட மொபைலாக சாம்சங் இந்த போனை சந்தையில் விரைவில் களமிறக்க உள்ளது. இந்த மொபைலின் எல்சிடி திரையும் வளைந்து நெளியும் என்பது கூடுதல் சிறப்பு.

இது 800 X 400 பிக்ஸல் ரிசல்யுஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் அமோல்டு தொழில் நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 8 மெகா பிக்ஸல் வசதி கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 1.2 ஜிஎச்இசட் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வசதி கொண்டது.

இன்றைய இந்திய சந்தையில் அமோல்டு திரை மற்றும் எல்சிடி வசதி கொண்ட மொபைல்கள் அதிக வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. இதனால் இந்த மொபைலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் மொபைலின் விலை இன்னும் 




Wednesday, September 28, 2011

பட்டையை கிளப்பும் டெல் XCD -35



டெல் எக்ஸ்சிடி-35 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது டெல் நிறுவனம். இதன் வடிவமைப்பு நிச்சயம் வாடிக்கையாளர்களை வாங்கத்தூண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது ஆன்ட்ராய்டு வசதி கொண்ட ஸ்மார்ட்போன்.

இந்த டெல் எக்ஸ்சிடி-35 மொபைல் 3.5 டிஎப்டி டச் ஸ்கிரீன் திரை கொண்டது. இதில் ஏஆர்எம் 11 600 எம்எச்இசட் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 3.2 எம்பி கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மொபைல் நிச்சயம் திருப்திகரமான புகைப்படத்தைக் கொடுக்கு்ம் என்று நம்பப்படுகிறது.

இந்த மொபைல் 3ஜி வசதிக்கு சப்போர்ட் செய்யும். டெல் எக்ஸ்சிடி-35 மொபைலில், வைபையின் மூலம் நெட் வசதியினைப் பெற முடியும். இதில் ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி வசதியும் உள்ளது.








இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ள யூஎஸ்பி வசதியினால் கணினியில் இருந்து தகவல்களைப் போனுக்கு எளிதாக பரிமாற்றம் செய்ய உதவுகிறது. இதில் டபிள்யூஏபி வசதியும் உள்ளது. இதன் மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 16 ஜிபி மெமரியைப் பெற முடியும். தகவல்களை எளிதாகப் பரிமாறிக் கொள்ள இதில் புளூடூத் வசதியும் உள்ளது. இந்த மொபைல் 200 எம்பி இன்டர்னல் மெமரியையும் வழங்குகிறது.

இது எட்ஜ் தொழில் நுட்பம் கொண்டது. இதன் எப்எம் ரேடியோ வசதியினைக் கேட்டு மகிழலாம். இதில் ஆடியோ மற்றும் வீடியோ வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.இந்திய சந்தையில் மதிப்பு ரூ.9,500 இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, September 25, 2011

4 சிம் கார்டு பொருத்தும் வசதியுடன் வரும் டெக்னோ மொபைல்

நான்கு சிம் கார்டுகளை பொருத்தும் வசதி கொண்ட மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது டெக்னோ நிறுவனம்.

4 சிம்களைக் கொண்ட மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது டெக்னோ நிறுவனம். இரண்டு சிம்களைப் பயன்படுத்திய காலம் போய் இப்பொழுது புதிய 4 சிம் கொண்ட புதிய மொபைல் வர இருக்கிறது. டி-4 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் அடுத்த மாதம் நெய்ரோபியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இந்த தகவலை டெக்னோ நிறுவன மார்கெட்டிங் மேனேஜர் திரு.ஆடம் ஜின் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். நோக்கியா, சாம்சங் போன்ற மொபைல் நிறுவனங்களுக்கு டெக்னோ மொபைலின் இந்த புதுமை சற்று கலக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் வசதியான வாய்ப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அனைத்து நிறுவனங்களும் டியூவல் சிம் வசதி கொண்ட மொபைலை தயாரித்து வெற்றி கண்ட நேரத்தில் சில நிறுவனங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட சிம்களை உருவாக்குவது பற்றி யோசித்திருப்பது மிகவும் அரிய விஷயமாகத் தோன்றுகிறது.

அந்த வகையில் டெக்னோ நிறுவனமும் இந்த பெருமைக்கு உரியதாகத் தெரிகிறது. இந்த மொபைல் முதலில் கென்யன் மார்கெட்டில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்திய சந்தையில் ரூ.15,000 விலையில் இருந்து தொடங்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது

Wednesday, September 21, 2011

மல்டி டச் ஸ்கிரீன் வசதியுடன் வரும் வியூவ்சோனிக் போன்









ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் மொபைலை வெளியிட உள்ளது வியூவ்சோனிக் நிறுவனம். இந்த மொபைல் மாடலில் 1 ஜிகாஹெர்ட்ஸ் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் சிங்கிள் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. வேகமாக செயல்படுவற்கு இது உதவுகிறது.

இந்த மாடல் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.2 பிரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது. இது 4.3 இஞ்ச் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டபிள்யூ மல்டி டச் ஸ்கிரீன் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 800 X 480 பிக்ஸல் கொண்டதாக இருக்கும். இதில் 512 எம்பி ரேம் வசதி உள்ளது.

இதன்மூலம், துல்லியமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்க முடியும். இதில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோவை ஆப்பரேட் செய்வது மிகவும் எளிதான ஒன்றாகும். எம்பி 4, எம்பி 3, டபிளயூஎம்ஏ, டபிள்யூஏவி போன்ற மீடியா பார்மெட்களை சப்போர்ட் செய்கிறது.

வியூசோனிக் வி-430 மொபைலில் விஜிஏ செகன்டரி முகப்பு கேமராவும், 5 மெகா பிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இது மிகவும் தெளிவான புகைப்படத்தைக் கொடுக்கிறது. இதன் மூலம் 3 ஜி கம்பாட்டிபிலிட்டி வசதியும் கிடைக்கிறது.

எளிதான முறையில் நெட் வசதியினைப் பெற வைபை, ஜிபிஎஸ், வி2.1 ஏ2டிபி புளூடூத் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் யூஎஸ்பி வசதியினைப்பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் இதில் யூஎஸ்பி வசதி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அனைவரையும் கவரும் வகையில் இதன் விலை இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.







Monday, September 19, 2011

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 3ம் தலைமுறை ஆப்பிள் ஐபேட்


ஆப்பிள் நிறுவனம் வடிவமைக்கும் அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெறுவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து வரும் ஆப்பிள் ஐபேட்-3 பற்றிய தகவல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட்டில் உலவி வருகின்றன.

கடைசியாக ஆப்பிள் ஐபேட்-3 ன் வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்கள் குறித்து சில பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது வெளியாகியுள்ள வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்களை காணலாம்.

1. இரண்டு மாடல்களில் ஐபேட்-3யை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில், ஒன்று 9.7 இஞ்ச் திரை கொண்டதாகவும், மற்றொன்று 7 இஞ்ச் திரையை கொண்டதாகவும் இருக்கும்.

2. இதுவரை இல்லாத வகையில் ஹைடெபினிஷன் மற்றும் கிராபிக்ஸ் வீடியோக்களை சப்போர்ட் செய்யும் அதிக துல்லியம் கொண்ட 'ரெட்டினா' டிஸ்ப்ளேயை கொண்டதாக ஐபேட்-3 வருகிறது.

3. ஆப்பிள் ஐபேட்-3 யில் 4 பிராசஸர்கள் கொண்ட ஏ-6 கோர் பிராசஸர் பொருத்தப்பட இருப்பதாக முன்பு கூறப்பட்டது. இது தற்போதைய ஐபேட்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஏ-5 பிராசஸர்களைவிட 30 சதவீதம் வேகமாகவும், 50 சதவீதம் அளவுக்கு பேட்டரியை மிச்சப்படும் ஆற்றல் கொண்டவையாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அந்த பிராசஸரை தயாரிக்கும் பணிகள் முழுமை பெறாததால், மற்ற ஐபேட்களில் பொருத்தப்பட்டிருக்கும் 2 பிராசஸர்கள் அடங்கிய ஏ-5 கோர் பிராசஸருடன் ஆப்பிள் ஐபேட்-3 வர இருப்பதாக கூறப்படுகிறது.

4. தற்போதைய ஐபேட்களின் முகப்பில் வீடியோ காலிங் வசதிக்கான விஜிஏ முகப்பு கேமராவும், பின்புறத்தில் 720பிக்ஸல் துல்லியத்தில் வினாடிக்கு 30 பிரேம்களில் வீடியோ எடுக்கும் திறன் கொண்ட கேமராவும் பொருத்தப்பட்டிருந்தது.
ஆனால், ஐபேட் வாடிக்கையாளர்கள் கேமராவின் திறன் பற்றி குறை கூறியது ஆப்பிள் நிறுவனத்தின் காதுக்கும் எட்டியிருக்கிறது. எனவே, ஐபேட்-3 யில் ப்ளாஷ் வசதியுடன் கூடிய ஆற்றல்வாய்ந்த 8 மெகாபிக்ஸல் கேமராவுடன் அறிமுகப்படுத்த உள்ளது ஆப்பிள்.

5. இவை எல்லாவற்றையும் விட ஐபேட்-3 யில் என்எப்சி சிப் பொருத்தப்பட்டு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்று ஐபேட்-3யை பயன்படுத்தி கடைகளில் பொருட்கள் வாங்க முடியும் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

6. ஐபேட்-2 வில் பெரும் குறையாக இருப்பது சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளும் வகையில் மெமரி கார்டு பொருத்துவதற்கான ஸ்லாட் இல்லாதது. ஆனால், இந்த குறையை ஐபேட்-3 தீர்த்து வைக்கும் என்று தெரிகிறது. ஆம், ஐபேட்-3யில் மைக்ரோஎஸ்டி ஸ்லாட்டுடன் வர இருக்கிறது.

7. ஐபேட்-3 யில் நீடித்த ஆற்றலை வழங்க வல்ல அளவில் மிகசிறிய பேட்டரி பொருத்தப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் அதிக ஆற்றல் கொண்ட இந்த பேட்டரியின் விலை தற்போதைய பேட்டரிகளைவிட 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. கம்ப்யூட்டர்களில் பயன்படும் நவீன தண்டர்போல்ட் தொழில்நுட்பம் ஐபேட்-3யில் அப்லோடு செய்யப்பட்டு வர இருக்கிறது. இதனால், கேபிள் வழியாக ஹைடெபினிஷன் கொண்ட சினிமாவை வெறும் 30 வினாடிகளுக்குள் ஐபேட் மூலம் பரிமாற்றம் செய்ய முடியும்.







நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 3ம் தலைமுறை ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் நிறுவனம் வடிவமைக்கும் அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெறுவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து வரும் ஆப்பிள் ஐபேட்-3 பற்றிய தகவல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட்டில் உலவி வருகின்றன.

கடைசியாக ஆப்பிள் ஐபேட்-3 ன் வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்கள் குறித்து சில பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது வெளியாகியுள்ள வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்களை காணலாம்.

1. இரண்டு மாடல்களில் ஐபேட்-3யை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில், ஒன்று 9.7 இஞ்ச் திரை கொண்டதாகவும், மற்றொன்று 7 இஞ்ச் திரையை கொண்டதாகவும் இருக்கும்.

2. இதுவரை இல்லாத வகையில் ஹைடெபினிஷன் மற்றும் கிராபிக்ஸ் வீடியோக்களை சப்போர்ட் செய்யும் அதிக துல்லியம் கொண்ட 'ரெட்டினா' டிஸ்ப்ளேயை கொண்டதாக ஐபேட்-3 வருகிறது.

3. ஆப்பிள் ஐபேட்-3 யில் 4 பிராசஸர்கள் கொண்ட ஏ-6 கோர் பிராசஸர் பொருத்தப்பட இருப்பதாக முன்பு கூறப்பட்டது. இது தற்போதைய ஐபேட்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஏ-5 பிராசஸர்களைவிட 30 சதவீதம் வேகமாகவும், 50 சதவீதம் அளவுக்கு பேட்டரியை மிச்சப்படும் ஆற்றல் கொண்டவையாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அந்த பிராசஸரை தயாரிக்கும் பணிகள் முழுமை பெறாததால், மற்ற ஐபேட்களில் பொருத்தப்பட்டிருக்கும் 2 பிராசஸர்கள் அடங்கிய ஏ-5 கோர் பிராசஸருடன் ஆப்பிள் ஐபேட்-3 வர இருப்பதாக கூறப்படுகிறது.

4. தற்போதைய ஐபேட்களின் முகப்பில் வீடியோ காலிங் வசதிக்கான விஜிஏ முகப்பு கேமராவும், பின்புறத்தில் 720பிக்ஸல் துல்லியத்தில் வினாடிக்கு 30 பிரேம்களில் வீடியோ எடுக்கும் திறன் கொண்ட கேமராவும் பொருத்தப்பட்டிருந்தது.
ஆனால், ஐபேட் வாடிக்கையாளர்கள் கேமராவின் திறன் பற்றி குறை கூறியது ஆப்பிள் நிறுவனத்தின் காதுக்கும் எட்டியிருக்கிறது. எனவே, ஐபேட்-3 யில் ப்ளாஷ் வசதியுடன் கூடிய ஆற்றல்வாய்ந்த 8 மெகாபிக்ஸல் கேமராவுடன் அறிமுகப்படுத்த உள்ளது ஆப்பிள்.

5. இவை எல்லாவற்றையும் விட ஐபேட்-3 யில் என்எப்சி சிப் பொருத்தப்பட்டு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்று ஐபேட்-3யை பயன்படுத்தி கடைகளில் பொருட்கள் வாங்க முடியும் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

6. ஐபேட்-2 வில் பெரும் குறையாக இருப்பது சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளும் வகையில் மெமரி கார்டு பொருத்துவதற்கான ஸ்லாட் இல்லாதது. ஆனால், இந்த குறையை ஐபேட்-3 தீர்த்து வைக்கும் என்று தெரிகிறது. ஆம், ஐபேட்-3யில் மைக்ரோஎஸ்டி ஸ்லாட்டுடன் வர இருக்கிறது.

7. ஐபேட்-3 யில் நீடித்த ஆற்றலை வழங்க வல்ல அளவில் மிகசிறிய பேட்டரி பொருத்தப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் அதிக ஆற்றல் கொண்ட இந்த பேட்டரியின் விலை தற்போதைய பேட்டரிகளைவிட 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. கம்ப்யூட்டர்களில் பயன்படும் நவீன தண்டர்போல்ட் தொழில்நுட்பம் ஐபேட்-3யில் அப்லோடு செய்யப்பட்டு வர இருக்கிறது. இதனால், கேபிள் வழியாக ஹைடெபினிஷன் கொண்ட சினிமாவை வெறும் 30 வினாடிகளுக்குள் ஐபேட் மூலம் பரிமாற்றம் செய்ய முடியும்

Thursday, September 15, 2011

நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மைக்ரோமேக்ஸ் ஏ-85



நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய சூப்பர் போனை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஏ-85 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சூப்பர் போன் வடிவமைப்பிலும் அசத்துகிறது.3.8 டிஎஃப்டி டச் ஸ்கிரீனுடன் மின்னுகிறது ஏ-85. 480 X 800 பிக்ஸல் ஸ்டேன்டர்டு டிஸ்ப்ளேயை ஏ-85 கொண்டுள்ளது. அதோடு 246 பிபிஐ பிக்ஸல் டென்சிட்டியை சப்போர்ட் செய்கிறது. சென்சார் ஆட்டோ டர்ன் ஆஃப் மற்றும் சென்சார் யூஐ ஆட்டோ ரொட்டேட் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

8 ஜிபி வரை ஸ்டோரேஜ், 512 எம்பி ரேம் வசதி உள்ளது. இதனை 32 ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். ஓஎஸ் கான்ஃபிகிரேஷன் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது சூப்பர் போன் நிஜமாகவே சூப்பர் தான்.இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் சிறந்த முறையில் செக்யூர்டு செய்யப்பட்டுள்ளது.

தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டுமா இதோ இருக்கவே இருக்கிறது புளூடூத் வசதி.வேகமான தகவல் பரிமாற்ற செயல்பாட்டிற்கு வைபை வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. எட்ஜ் டெக்னாலஜி கொண்டு ஜிபிஆர்எஸ் சவுகரியமும் இதில் தரப்பட்டுள்ளது.

இதில் 1ஜிஹெசட் என்விஐடிஐஏ டெக்ரா 2 டியூல் கோர் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஓஎஸ் வர்ஷன் ஃப்ரையோ 2.2 வழங்கப்பட்டுள்ளது. வீடியோ ரெக்கார்டிங் வசதிக்காக720 பி ஹெச்டி,5எம்பி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

அட்வான்ஸ்டு இமேஜ் ஆட்டோ ஃபோக்கஸ்,ஜியோ டேக்கிங் போன்ற வசதிகளையும் எந்த வித சிரமமும் இல்லாமல் பெறலாம். இந்த மைக்ரோமேக்ஸ் ஏ85 மாடல் ரூ.15,000 இருந்து ரூ.18,000 வரை இதன் விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







Wednesday, September 14, 2011

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் சாம்சங் போன்கள்


புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்பட்டுத்திக் கொண்டிருக்கிறது சாம்சங் நிறுவனம். இந்த முறை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. சாம்சங் ஃபோகஸ் எஸ் மற்றும் ஃபோகஸ் ஃப்ளாஷ் என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டு மாடல்களிலுமே வின்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு வின்டோஸ் போன் மேங்கோ என்றும் பெயர் உண்டு. சாம்சங் போக்கஸ் எஸ் மாடலில் 1ஜிஎச்இசட் ஸ்கார்பியன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஆன்ட்ரோ 200 ஜிபியூ மற்றும் க்யூவல்காம் க்யூஎஸ்டி8250 ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியைப் பெறமுடியும்.

அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் 4 இஞ்ச் திரை வசதி கொண்டுள்ளது. சூப்பர் அமோல்டு மல்டி டச் ஸ்கிரீன் வசதியும் இதில் உள்ளது. சாம்சங் மாடலில் 8 மெகா பிக்ஸல் கொண்ட சிறந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகவும் தெளிவான படத்தைப் பெறமுடியும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இதில் 3.2 பிக்ஸல் கொண்ட முகப்புக் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

சாம்சங் ஃபோக்கஸ் ஃப்ளாஷ் மாடலில் 5 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா உள்ளது. ஃபோக்கஸ் எஸ் மாடலை விட ஃபோக்கஸ் ஃப்ளாஷ் மாடலில் உள்ள கேமராவின் பிக்ஸல் குறைவுதான், இருப்பினும் துல்லியமான படங்களை எளிதில் பெற முடியும். இதில் உள்ள 7.5 வின்டோஸ் மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் 1.4 ஜிஎச்இசட் பிராசஸருக்கு சப்போர்ட் கொடுக்கிறது.

இந்த இரண்டு மாடல்களிலுமே ரிமூவபில் பேட்டரிப் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் ச்சேட், ம்யூக், பார்-கோட் ஸ்கேனர், போட்காஸ்ட் ப்ளேயர், வைபை, ஜிபிஎஸ், போன்ற வசதிகளும் இந்த ஹேண்ட்செட்டில் உள்ளன. சாம்சங் ஃபோக்கஸ் எஸ் மாடல் ரூ.25,000 விலைக்கும், ஃபோக்கஸ் ப்ளாஷ் மாடல் ரூ.20,000 விலைக்கும் எதிர் பார்க்கப்படுகிறது.








Friday, September 9, 2011

பட்டையகிளப்பும் ஏஸர் பெராரி மொபைல்கள்



ஏஸர் லிக்யுட் மினி பெராரி மொபைல்கள் ஒரு வருடத்திற்கு முன்பாக வந்தது. இப்போது பல புதிய தொழில் நுட்பங்களுடன் புதுப் பொலிவுடன் ஏஸர் லிக்யுட் மினி பெராரி என்ற பெயரில் மீண்டும் வருகிறது. ஒரிஜினல் பெராரியாஸ் சான்றிதழ் பெற்ற இந்த புதிய ஏஸர் லிக்யுட் மினி பெராரி மொபைல்கள் இந்தியாவிற்கு விரைவில் வந்துவிடும் என நம்பலாம்.

ஏஸர் லிக்யுட் மினி பெராரியின் எடை 105 கிராம்களாகும். இது சிவப்பு வண்ணத்துடன் பெராரியின் சின்னம் தாங்கி தனது ரசிர்களை அசத்த வருகிறது. பில்ட்-இன் வசதிகளான பெராரியின் ஆட்டோமொபைல் வால்பேப்பர்கள் மற்றும் ஏராளமான படங்கள் மற்றும் பெராரி எந்திரங்களின் ஒலிகள் அகியவை உள்ளன. 


அதி விரைவான செயல்பாட்டிற்காக க்வல்காம் ஸ்நாப்ட்ராகன் எம்எஸ்எம்227-1 சிப்செட்டுடன் 600 மெகா ஹர்ட்ஸ் க்லாக் வேகத்தில் இயங்கக்கூடிய எஆர்எம் 11 ப்ராஸஸருடன் வருகிறது. மேலும் அட்ரினோ 200 க்ராபிக்ஸ் அக்ஸிலரேட்டர் இந்த மொபைலுக்கு மேலும் பெருமை சேர்க்கும். இதன் 512 எம்பி ராம் அசைக்க முடியாத உறுதியை இந்த மொபைலுக்குத் தரும்.
இதன் ராம் மற்றும் ப்ராசஸர் அகியவை அப்டேட் செய்யப் படாதவையா இருந்தாலும் இதன் ஆண்டராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீட் ஓஎஸ் மற்ற எல்லா குறைகளையும் மறைத்து விடும். ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் உண்மையாகவே சொத்தக்களாக இருக்கின்றன. அந்த வகையில் இந்த மொபைல் அந்த சொத்துக்களை அள்ளித்தரும் மாயாவியாக இருக்கும் என நம்பலாம்.




ஏஸர் லிக்யுட் மினி பெராரியின் ரியர் கேமரா 5 மெகா பிக்ஸல் ஆகும். ஆனால் இதில் ப்ளாஷ் கிடையாது. மேலும் இதில் 720பி ரிசலூசன் வரை எச்டி வீடியோக்களை ரிக்கார்ட் செய்யும் வீடியோ ரிக்கார்டிங் வசதி இல்லை. ஆனால் தரமான தெளிவாக வீடியோக்களை ரிக்கார்ட் செய்யலாம்.

மேலும் இது நவீன ஏஸர் யுஐ 4.2 கொண்டிருப்பதால் இதன் யூசர் இன்டர்பேஸ் மிக லகுவாக இருக்கும். மினி பெராரியின் திரை பழைய பெராரியின் அளவை விட சிறியதாகும். மினி பெராரியின் ரிசலூசன் 320 x 480 பிக்ஸல்களாகும்.

ஆனால் பிக்ஸிலின் அடர்த்தி 229 பிபிஐ கொண்டுள்ளதால் இதன் டிஸ்ப்ளே மிகத் தரமாக இருக்கும். மேலும் மினி பெராரி மைக்ரோ எஸ்டி கார்டுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும். அதாவது இது 8ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டுடன் பெராரியின் ப்ளூடூத் ஹெட்செட்டை வழங்குகிறது.ஆக நிறைந்த சகல அம்சங்களுடன் வரும் இந்த மினி பெராரி மலிவு விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









Monday, September 5, 2011

பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் நோக்கியா 730 ஸ்மார்ட்போன்


நோக்கியாவின் புதிய நோக்கியா 703 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையதளங்களில் பரவலாக வந்து கொண்டிருக்கின்றன. அதன் சிறப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக நோக்கியா 703 பட்ஜட் போனாகவோ அல்லது விலை உயர்ந்த போனாகவோ இல்லாமல் நடுத்தர விலையில் இருக்கும். நோக்கியா 703 நோக்கியாவின் சீ ரே போனைப் போல் 3.9 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது.

இணையதள் தகவல்களின் படி நோக்கியா 7.3 1ஜிபிஹச் ப்ராஸஸரைக் கொண்டிருக்கிறது. மேலும் இது 512எம்பி ராமை கொண்டிருப்பதால் நீண்ட நாள் உழைக்கும். இதன் ஓஎஸ் விண்டோஸ் 7 ஆகும்.

இதன் தொடுதிரை 3.7 இன்ச் டிஸ்ப்ளே ஆகும். மேலும் இதில் ஐபிஎஸ் பேனல் உள்ளது. இதன் திரையில் காட்சிகள் மற்றும் படங்கள் 480X800 ரிசலூசனில் இருக்கும். இதன் எல்சிடி திரையில் விண்டோஸ் அவுட்லுக் மிக தெளிவாக இருக்கும். மேலும் இதன் கேமரா 5 மெகா பிக்ஸல் ஆகும். இதன் மூலம் சிறப்பான படங்களை எடுக்க முடியும். இதில் எடிட்டிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த கேமராவில் ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் உள்ளதால் தரமான தெளிவான படங்களை சேமிக்க முடியும். மேலும் இந்த கேமரா 720பி ஹச்டி வீடியோவை சப்போர்ட் செய்கிறது.

நோக்கியா 703 8ஜிபி சேமிப்பு வசதியுடன் தனியாக மெமரி கார்டையும் வழங்குகிறது. மேலும் இண்டர்னல் சேமிப்புக்கான போர்டும் இந்த மொபைலில் உள்ளது. தகவல் பரிமாற்றத்துக்காக தரமான வைபை மற்றும் ப்ளூடூத் வசதிகளும் உள்ளன. நெட்வொர்க் தொடர்புக்காக 3ஜி வசதி, பிஜிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில்நுட்பமும் உள்ளன. மேலும் ஜிபிஎஸ் வசதி மற்றும் ஓவிஐ மேப்ஸ் ஆகியவை இந்த மொபைலுக்கு கூடுதல் மதிப்பெண்களை வழங்குகிறது. மேலும் இதில் எளிய ஸின்க்ரோனைஸேஷன் செய்ய மைக்ரோயுஎஸ்பி போர்ட்டும் உள்ளது. இதன் விலையைப் பற்றிய தகவல்கள் இன்னும் வரவில்லையென்றாலும் இது சிறந்த ஒரு போனாக இருக்கும் என நம்பலாம்.













Friday, September 2, 2011

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத நோக்கியா



சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத குறைந்த கதிர்வீச்சை வெளியிடும் போன்களை நோக்கியா அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா-700 மற்றும் நோக்கியா-701 என்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன்கள் விரைவில் இந்தியாவை வந்தடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், நோக்கியா-700 ஸ்மார்ட்போன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நோக்கியா தெரிவிக்கிறது. மற்றொன்று, நோக்கியா-701 போன் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் சி-7 போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வருகிறது.

நோக்கியா-700 மாடல் 3.2 இஞ்ச் தொடுதிரை கொண்டதாக அமோலெட் மற்றும் என்- ஹைடெபினிஷன் டிஸ்ப்ளேவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது துல்லியமான படங்கள் காட்டுவது மட்டுமின்றி ஹைடெபினிஷன் வீடியோ ப்ளேபேக்கை கொடுப்பதால் புதிய பரவசத்தை ஏற்படுத்தும்.





மேலும், அனிமேஷன் வீடியோ கேம்களை மிக துல்லியமாக காட்டும் தொழில்நுட்பத்தையும் இது கொண்டுள்ளது. அதேவேளை, நோக்கியா-701 போன் 3.5 தொடுதிரையுடன் 700ஐ விட சற்று பெரிதாக இருக்கிறது. இது எல்இடி பேக்லிட் மற்றும் டிஎப்டி தொடுதிரையை கொண்டுள்ளது.

நோக்கியா-700 போனில் 5 மெகாபிக்செல் கேமராவை கொண்டிருக்கிறது. ஆனால், நோக்கியா-701 போன் அதிக ஆற்றல்வாய்ந்த ட்யூவல் ப்ளாஷ் வசதியுடன் 8 மெகாபிக்செல் கேமராவை கொண்டிருக்கிறது. வீடியோ ரெக்கார்டிங், பிக்ஸ்டு ஃபோகஸ் ஆகிய வசதிகளும் இருக்கிறது. நோக்கியா-701 போனில் வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.


இரண்டிலும் 512எம்பி இன்டர்னல் மெமரியை பெற்றுள்ளன. ஆனால், சேமி்ப்பு திறனை அதிகரித்துக்கொள்வதில் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. நோக்கியா-700 போன் 1ஜிபி எக்ஸ்டர்னல் மெமரியையும், நோக்கியா-701 போனில் 8ஜிபி மெமரி திறனையும் பெற்றுள்ளன. ஆனால், இரண்டு போனிலும் 32 ஜிபி வரை மைக்ரோஎஸ்டி ஸ்லாட் மூலம் சேமிப்பு திறனை கூட்டிக்கொள்ளும் வசதி இருக்கிறது.

இரண்டு போன்களிலும் 3ஜி நெட்வொர்க் சப்போர்ட், வைஃபை மற்றும் ப்ளூடூத் தகவல் பரிமாற்றத்திற்கான தொடர்பு வசதிகள் பொதுவானதாக இருக்கிறது. வீடியோ ப்ளேயர், மியூசிக் ப்ளேயர், வீடியோ கேம்ஸ் மற்றும் எப்எம் ரேடியோ ஆகியவை பொதுவான அம்சங்கள்.

நோக்கியா-700 போன் 19 நாள் ஸ்டான்ட்-பை மற்றும் 7 மணிநேர டாக் டைம் வசதியை கொடுக்கும். அதேவேளை, நோக்கியா-701 ஸ்மார்ட்போன் 21 நாட்கள் ஸ்டான்ட்-பை மோடிலும், 17 மணிநேர டாக்டைம் வசதியையும் வழங்கும்.

விலையை பொறுத்தவரை நோக்கியா-700 போன் ரூ.18,000க்கும், நோக்கியா-701 போன் ரூ.20,000க்கும் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



நன்றி:ஒன் இந்தியா 

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...