onlne

Wednesday, August 31, 2011

ரம்ஜான் சிறப்பு பரிசு அனைவர்க்கும்





  
 இந்த கிப்ட்டை தீறக  கிளிக்



Monday, August 29, 2011

விரைவில் கார்பன்னின் பட்ஜெட் போன்கள்





இந்திய மொபைல் நிறுவனமான கார்பன் நிறுவனம், தற்போது தரமான 3ஜி மொபைல்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. இதன் தொடர்ச்சியாக டூவல் சிம் வசதியுடன் கேடி-100 மற்றும் கே-1515 என்ற புதிய மொபைல்களை விரைவில் அறிமுகப்படுத்துகிறது.

இந்த இரண்டு மொபைல்களும் ஒரே நேரத்தில் வரும் என்று தெரிகிறது. கேடி-100 டிஷ்னி சீரிஸ் மொபைலாகும். ஆனால், கே-1515 ஒரு 3டி மொபைலாகும்.

இரண்டு மொபைல்களுக்கிடையே எராளமான் ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் உள்ளன. குறிப்பாக கேடி-100 மொபைல், 170 x 220 ரிசலூசன் கொண்ட 2.0 இஞ்ச் டிஎப்டி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது.

ஆனால் கே-1515 எச்விஜிஏ 3.2 இஞ்ச் தொடுதிரையை கொண்டிருக்கிறது. இவற்றின் மெமரி சேமிப்பைப் பார்த்தால் கே-1515 போன் 1ஜிபி இன்டர்னல் மெமரியுடன், 8ஜிபி எக்ஸ்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது. ஆனால் கேடி-100 போன் 16ஜிபி எக்ஸ்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது.

கார்பன் கேடி-100ல் டூவல் மெமரி கார்டு வசதி உள்ளது. அதனால் இதில் 16ஜிபி கொண்ட 2 டூவல் மெமரிகார்டுகளை வைத்திருக்க முடியும். மேலும் கேடி-100 இமெயில் சப்போர்ட் மற்றும் ஒபெரா மினி ப்ரவுஸர் போன்றவை கொண்டிருப்பதால் கே-1515ஐ விட கேடி-100 ஒரு படி மேலே இருக்கிறது.

இரண்டு மொபைல்களுமே 6 முதல் 8 மணி நேரம் விடாமல் இயங்கக்கூடிய உயர்திறன் கொண்ட பேட்டரியுடன் 2 மெகா பிக்ஸல் கேமராவையும் கொண்டுள்ளன. மேலும் இரண்டுமே கேமரா, மியூசிக் ப்ளேயர், எப்எம் மற்றும் ப்ளூடூத் வசதியையும் கொண்டுள்ளன.

இந்த இரண்டு மொபைல்களின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இவற்றை எவரும் எளிதில் திருடிவிட முடியாது. அவ்வாறு திருடி விட்டால் இவற்றை எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய அளவிற்கு ட்ராக்கர் தொழில் நுட்பம் உள்ளது.

இந்த இரண்டு போன்களின் ஆதிக்கம் சந்தையில் அதிகம் இருக்கும் என்று இப்போதே தெரிகிறது. டூவல் சிம் வசதி கொண்ட மொபைல் வாங்க வேண்டுமானால் கே-1515யும், டூவல் மெமரி கார்டு வசதி வேண்டுமானால் கேடி-100யும் தேர்ந்தெடுக்கலாம். விலையைப் பார்த்தால் கேடி-100 மொபைல் ரூ. 5,000க்கும், கே-1515 மொபைல் ரூ. 7,500க்கும் கிடைக்கும்.






Sunday, August 28, 2011

அட்டகாசமான அம்சங்களை கொண்ட i -போன் 5 சிறப்பம்சங்கள் video

அட்டகாசமான அம்சங்களை கொண்ட i -போன் 5 சிறப்பம்சங்கள் உங்களுக்காக வீடியோ வாக  


Saturday, August 27, 2011

ஆன்லைனில் அலுக்காமல் பாட்டு கேட்க அருமையான போன்: சோனி அறிமுகம் .



டெல்லி: வாக்மேன் தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை வாங்கிய சோனி எரிக்ஸன் தற்போது ஆன்ட்ராய்டில் இயங்கும் வாக்மேன் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.த

சோனி எரிக்ஸன் லைவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் முழுக்க முழுக்க இசை பிரியர்களை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆம். ஆன்லைனில் இசை கேட்பதற்கு ஏதுவாக பிரத்யேக பட்டனுடன் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த பட்டனை ஒரு முறை அழுத்தினால் போதும். நாம் விரும்பும் இசைதளத்திற்குள் சென்று இசை பைல்களை கட்டி இழத்து வந்துவிடும். அதுமட்டுமல்ல, விருப்பமான பாடல்களை ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.

இந்த போன் 3.2 இஞ்ச் கொண்ட இதன் தொடுதிரை மல்டி டச் வசதி கொண்டது. இதன் டிஸ்பிளே 16மில்லியன் கலர்களை பிரித்தறியும் ஆற்றல் கொண்டது.

தவிர, ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேகத்திற்கு தோள்கொடுக்கும் வகையில் 1ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸருடன் வந்துள்ளது.

இதில், வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளே சப்போர்ட் செய்யும்.

இது வெறும் 115 கிராம் மட்டுமே எடை கொண்டதாக இருக்கும். இதன் டிஸ்பிளே கீறல்கள் விழாத வகையில் சூழப்பட்ட பிரத்யேக உறையை கொண்டுள்ளது.

320எம்பி இன்டர்னல் சேமிப்பு திறனுடன் 2ஜிபி சேமிப்பு திறன் கொண்ட இ்ந்த போனில் 32ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரித்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

ஆட்டோஃபோகஸ், எல்இடி ப்ளாஷ் மற்றும் போட்டோ எடிட்டிங் வசதிகளுடன் 5 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஜியோ டேக்கிங், இமேஜ் மொபிலைசேஷன் உள்ளிட்ட வசதிகளும் இருக்கிறது. க்ரையோசிட்டி மீடியா அப்லோடுன் இந்த போன் வந்துள்ளது. இதன் மூலம், சோனி இணையதள மீடியா சேவை தொகுப்பிலிருந்து வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

ஜிபிஆர்எஸ், எட்ஜ் உள்ளிட்ட தொடர்பு வசதிகளையும் வழங்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை











Wednesday, August 24, 2011

எக்ஸ்பீரியா போனகளுக்கு புதிய வீடியோ சேவை: சோனி எரிக்ஸன் வழங்குகிறது








சோனி எரிக்சன் மொபைல் நிறுவனம் தனது எக்ஸ்பீரியா ஆண்ட்ராய்டு போன்களில் க்யூரியாசிட்டி வீடியோ சேவையை வழங்க திட்டமிட்டிருக்கிறது.

வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த புதிய சேவையைத் தொடங்கிவிடுவார்கள் என்று தெரிகிறது. இது உண்மையில் மொபைல் பிரியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை..

ஏற்கனவே சோனி எரிக்சன் நிறுவனம் தமது எக்ஸ்பீரியா ரே மற்றும் எரிக்சன் ஸிபேரியா போன்ற ஆண்ட்ராய்டு மொபைல்களில் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நற்சேவை செய்து வருகிறது.

இப்பொழுது, எக்ஸ்பீரியா மினி மற்றும் எக்ஸ்பீரியா மினி ப்ரோ ஆகிய இரு மொபைல்போன்களிலும் முதற்கட்டமாக இந்த சேவையை பெற முடியும்..

இந்த சேவையினால் என்ன பலன் என்று பலருக்கும் கேள்வி எழலாம். இதனால் பல நன்மைகள் உள்ளன.

க்யுரியோசிட்டி வீடியோ என்பிஸி, பாராமவுண்ட் பிக்ஸர்ஸ், சோனி பிக்ஸர்ஸ் ஹோம் எண்டர்டைன்மென்ட், ட்வெண்டியத் செஞ்சூரி பாக்ஸ் மற்றும் வார்னர் பிரதரிஸ் போன்ற ஸ்டூடியோக்களிடமிருந்து படங்களை பதிவு செய்ய அனுமதிக்கிறது.

இதன்மூலம் டிவி சேவையயும் மொபைலில் வழங்கும். இத்தகைய வசதிகள் இந்த மொபைலில் இருப்பதால் இதன் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொபைல்கள் வாடிக்கையாளர்களுக்கு உண்மையாகவே எல்லா வசதிகளையும் வாரி வழங்கும். இவை ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் சிறந்த ரிசலூஷன் கொண்ட கேமராவையும் தரமான வீடியோ ரிக்கார்டிங் வசதியையும் வழங்குகிறது.

மேலும் பேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க் வசதிகளை இதில் விரைவாக இயக்க முடியும். இதன் மூலம் நாம் நமது புகைப்பட ஆல்பத்தை நேரடியாக இணைக்க முடியும்.

இதிலுள்ள காலண்டரின் மூலம் நமது பேஸ்புக் நடவடிக்கைகளையும் நமது எதிர்கால நிகழ்வுகளையும் முன்கூட்டியே குறித்து வைக்க முடியும்.

எல்லாவற்றையும் தாண்டி இந்த மொபைல்கள் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கின்றன.

பொதுவான சிறப்பு நிகழ்வுகளில் நாம் கலந்துகொள்ளும் போது இந்த மொபைல்களை நாம் வைத்திருந்தால் கண்டிப்பாக இது நமக்கு கௌரவத்தைக் கொடுக்கும்.






Sunday, August 21, 2011

புதிய ஹைடெபினிஷன் மொபைல்போன்கள் - சாம்சங் அறிமுகப்படுத்துகிறது



எச்டி போன்களுக்கு இனி தட்டுப்பாடு இருக்காது. ஏனெனில், சாம்சங் நிறுவனம் எச்டி டிஸ்பிளேயுடன் கூடிய மொபைல் போன்களை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் தொடக்கமாக முதலில் அது ஆமோலெட் டிஸ்பிளையுடன் கூடிய 3 மொபைல்களை அரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக, இத்தாலியின் டெலிபோனியோ இணையதளத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சாம்சங் அடுத்த ஆண்டு 6 ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதோடு கூட உயர்ந்த தரத்தில் புதிய இரண்டு ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதில் ஒன்று விண்டோஸ் போன் 7.5 மாங்கோவையும் மற்றொன்று பாடா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் கொண்டிருக்கும்.




முதலில் சாம்சங் ஜிடி-5360 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது. அந்த போன் 2எம்பி கேமராவுடன், 3 இன்ச் அளவுள்ள டிஸ்பிளேயுடன் 240 X 320 ரிசலூஷன் கொண்ட திரையைக் கொண்டிருக்கும். 



மேலும், இது ஆண்ட்ராய்டு 2.3.3 ஜிஞ்சர்ப்ரீட் ஓஎஸ்ஸை பெற்றிருக்கும். அதே நேரத்தில் சாம்சங் ஜிடி-ஐ8150 என்ற புதிய போனையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இது 16ஜிபி மெமரியையும் 480 X 800 பிக்ஸல் ரிசலூஷன் கொண்ட திரையையும் பெற்றுள்ளது. மேலும் இது அதிவிரைவான 1.4 ப்ராஸஸர், 4 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 5 எம்பி கொண்ட 720பி ஹச்டி வீடியோ ரிக்கார்டிங்கையும் பெற்றிருக்கிறது.



சாம்சங்கின் கேலக்ஸி வரிசை போன்கள் சர்வதேச சந்தையில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதை தக்கவைக்க சாம்சங் புதிய வசதிகளுடன்கூடிய பல போன்களை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தவிர, வரும் காலங்களில் ஆண்ட்ராய்டு போன்களையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இப்பொழுது 1280 X 720 எச்டி ரிசலூஷனுடைய திரை கொண்ட போன்களை அது அறிமுகப்படுத்துவதால் உண்மையில் அது ஒரு கடும் போட்டியாக இருக்கும்.



சாம்சங்கின் அடுத்த கேலக்ஸி வரிசை ஜிடி-ஐ19220 போன் உண்மையிலேயே வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களை பெற்றிருக்கும். அதனுடைய சூப்பர் ஆமோலெட் டிஸ்பிளே (1280 X 720) சிறந்த செயல்திறத்துடன் இருக்கும். அதேபோல் நாம் ஆண்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சாண்ட்விச் ஓஎஸ் அதில் இருக்கும் என நம்பலாம். அதன் டிவைஸ் கூகுள் நெக்சஸ் ப்ரைமாகக் கூட இருக்கலாம். பொறுSத்திருந்து பார்ப்போம். கண்டிப்பாக சாம்சங் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாது.




Wednesday, August 17, 2011

வாங்கிடங்கயா வாங்கிடங்கயா



ரூ.56,622 கோடி மதிப்பீட்டில் மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனத்தை கூகுள் நிறுவனம் விரைவில் கையகப்படுத்துகிறது.மொபைல் போன் தயாரிப்பில் மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனம் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் போன்களை தயாரிப்பதில் மோட்டோராலா மொபிலி்ட்டி சர்வதேச சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிலையில், ஆன்ட்ராய்டு போன்களை நேரடியாக களமிறக்கும் வகையில், மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனத்தை விரைவில் கையகப்படுத்துகிறது கூகுள். மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனத்தின் 63 சதவீத பங்குகளை கூகுள் வாங்குகிறது.அதாவது, மோட்டோரோலா நிறுவனத்தின் ஒரு பங்கை 40 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,800) கொடுத்து வாங்குகிறது கூகுள். இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் மோட்டோரோலாவின் ஆன்ட்ராய்டு போன்களின் தயாரிப்பு கூகுள் கட்டுப்பாட்டிற்குள் வர இருக்கிறது.

இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கு இரு நிறுவனங்களின் இயக்குனர் குழுக்கள் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மிகப்பெரிய கையகப்படுத்தும் நடவடிக்கை குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) கூறியதாவது:
"எங்களின் ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட போன்களை தயாரிப்பதில் மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனம் மிகுந்த அர்ப்பணிப்பும், முக்கியத்துவத்தையும் கொடுத்து வருகிறது. இதுவே, அந்த நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு மிகமுக்கிய காரணம்.

இந்த நடவடிக்கை, ஆன்ட்ராய்டு ஓஎஸ் பயனாளிகள், பங்குதாரர்கள் மற்றும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்களை உருவாக்கும் டெவலப்பர்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கும் விதமாக அமையும்.இந்த புதிய முயற்சியின் மூலம் ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட புதிய மோட்டோரோலா போன்கள் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை பரிமாணத்திற்கு கொண்டு செல்லும். மோட்டோரோலாவை கூகுள் கையகப்படுத்துவதன் மூலம், ஆன்ட்ராய்டு போன் மார்க்கெட்டில் மாபெரும் புரட்சி ஏற்படும் என்று கருதப்படுகிறது. 



இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மோட்டோரோலாவை கையகப்படுத்தும் பணி முழுவதுமாக நிறைவடையும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தும் நடவடிக்கை காரணமாக ஆப்பிள் நிறுவனத்திற்கும், ஆசியாவை சேர்ந்த மொபைல் தயாரிப்பாளர்களுக்கும் மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் என்று மார்க்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.




Sunday, August 14, 2011

நோக்கியா tricks

நோக்கியா tricks


மெயின் ஸ்க்ரீன்ய்ள்

   *#92702689#

இது உங்கள் போன்உடைய 

  • சீரியல் நம்பர் 

  • தயறித மதம் மற்றும் வருடம் 

  • போன் வாங்கீய நாள் (MM ,YY )

  • ரிப்பேர் சையபட்ட நாள்

  • போனவுடைய லைப் டிமேர் 


மெயின் ஸ்க்ரீன்ய்ள்


*#06#

இது உங்கள் போன் உடைய I M E I  (International Mobile Equipment Identity)


                                                        XXXXXX     XX     XXXXXX    X
                                                   TAC      FAC       SNR     SP




TAC = Type approval code of your nokia Mobile
FAC = Final assembly code of your cellphone
SNR = Serial number of your nokia Phone
SP = Spare



5 மெகாபிக்ஸல் கேமராவுடன் வரும் எச்டிசி மஸா

எச்டிசி அறிமுகப்படுத்தவிருக்கும் மஸாவைப் பற்றி ஏராளமான தகவல்கள் வருகின்றன. அது வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில் ஏராளமான அம்சங்களை கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது உயர்ரகத்தை சேர்ந்த சிடிஎம்ஏ மற்றும் ஜிஎஸ்எம் நெட்வொர்க்கில் கலப்பின (ஹைபிரிட்) மொபைலாக இருக்கும் என்று தெரிகிறது.

மஸா 3.8 இன்ச் அளவில் டிஎஃப்டி தொடுதிரை கொண்டு 480 x 800 பிக்ஸல் டிஸ்பிளேவுடன் மிக கவர்ச்சியாக இருக்கிறது. தொடுதிரை மல்டி டச் வசதி கொண்டதாகும். இதன்மூலம் படங்களை திருப்ப முடியும் சுழற்ற முடியும் மற்றும் பெரிதாக மற்றும் சிறிதாக காட்டும் தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது. மேலும்

தொடுதிரை லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் கொண்டு துல்லியமான தெளிவை தருகிறது. இதில், எல்இடி ப்ளாஷ் மற்றும் ஆட்டோ ஃபோக்கஸ் வசதிகள் மற்றும் வீடியோ ரிக்கார்டிங் வசதி கொண்ட 5 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. அதனால் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

இது சிறப்பான தொடர்பு வசதிகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக விரைவான தகவல் பரிமாற்றத்திற்கான 2.1 ப்ளூடூத் வசதி மற்றும் வயர்லஸ் தொடர்புக்கு வைபை வசதியையும் வழங்குகிறது. அதனால் எவ்வளவு பெரிய வீடியோ, ஆடியோ பைலாக இருந்தாலும் மிக விரைவாக மற்ற டிவைஸ்களுக்கு மாற்ற முடியும்.

பிசி மற்றும் லாப்டாப்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய யுஎஸ்பி வசதியையும் வழங்குகிறது. மேலும் மஸா 3ஜி வசதியையும் கொடுக்கிறது. பொழுதுபோக்கு அம்சங்களுக்கான எம்பி3, டபுள்யுஎம்எ, எம்4அ மற்றும் எம்4பி போன்ற பைல்களை சப்போர்ட் செய்யும் மியூசிக் ப்ளேயரையும் கொண்டுள்ளது.

இதில் வீடியோ விளையாட்டுக்களை விளையாடினால் சிறந்த அனுபவத்தைப் பெறலாம். மஸா சிறந்த செயல்திறன் கொண்ட ப்ராஸஸருடன் கூடிய விண்டோஸ் மெபைல் 7 ஆபரேட்டிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது. மேலும், நவீன ஜிஎஸ்பி வசதியையும் பெறலாம். ரூ. 15,000 விலையில் மஸா அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.






Tuesday, August 9, 2011

மலிவு விலை 3ஜி ஃபோன்

ஏர்டைம் முதலில் மொபைல் நிறுவனங்களுக்கு வயர்லெஸ் சேவையை வழங்கி வந்தது. ஆனால் தற்போது மலிவு விலையில் 3ஜி டிவைஸோடு கூடிய டாரிட் என்ற 3ஜி ஃபோனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
ஏர்டைம் 3ஜி ஃபோன் டாரிட் 2.8 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்டது. பார்ப்பதற்கும் ஸ்டைலாக உள்ளது. அதில் குவெர்டி(QWERTY) கீபோர்ட் இருப்பதால் டைப் செய்வது சுலபம்.ஏர்டைம் 3ஜி ஃபோன் டாரிடின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அதனுடைய மலிவான விலையாகும்.
டாரிடில் 1.3 மெகா பிக்சல் கேமராவுடன் 3ஜிபி ஃபார்மட்டில் வீடியோ ரிக்கார்டிங்கும் உள்ளது. அதில் மிக விரைவான 3ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் வசதியும் உள்ளது.
இந்த மொபைல் 3.5 எம்எம் அளவுள்ள யுனிவர்சல் ஆடியோ ஜாக்குடன் மல்டி ஃபார்மட் மியூசிக் வீடியோ பிளேயர்,எஃப்எம், ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி பிசி ஸின்க் வசதியும் உள்ளது. 4ஜிபி வரை விரிவு படுத்தக்கூடிய மைக்ரோ எஸ்டி மெமரியை சப்போர்ட் செய்யும் அளவு இன்டர்னல் மெமரியும் உள்ளது.  



ஏர்டைம் 3ஜி ஃபோன் டாரிடின் சிறப்பு அம்சங்கள்:

* 3ஜி

* ஸ்டீரியோ ப்ளூடூத்

* 4ஜிபி மெமரி

* டச் மற்றும் டைப் இன்டர்ஃபேஸ்

* ஜாவா வசதி

இந்த மெபைல் ரூ. 4 ஆயிரத்து 999-க்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, August 8, 2011

சர்வதேச ரோமிங் வசதியுடன் மோட்டோ ஃபோட்டான்



அதிவேக இன்டர்நெட்டுக்கான 4ஜி தொழில்நுட்பம் மற்றும் 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல்- கோர் பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனை மோட்டரோலா அறிமுகப்படுததியது

ஸ்பிரின்ட் தொலைதொடர்பு நிறுவனத்துடன் இணந்து சர்வதேச ரோமிங் வசதியுடன் இந்த போனை மோட்டோரோலா சந்தைப்படுத்தியது .

பல நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஃபோட்டான் 4.3 இஞ்ச் கொண்ட அகன்ற தொடுதிரையுடன் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆற்றல்வாய்ந்த 8 மெகாபிக்செல் கேமராவும், வீடியோ காலிங் செய்யும் வசதிகொண்ட விஜிஏ முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

16ஜிபி வசதியான இன்டர்நெல் சேமிப்பு திறன்கொண்ட இந்த போனில் 32 ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ள முடியும். இது ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

இது  4ஜி தொழில்நுட்பம் மூலம் சர்வதேச ரோமிங் வசதியை கொடுக்கிறது. அதிநவீன வை-மேக்ஸ் இணைப்பும் இருக்கிறது. அடிக்கடி பல்வேறு நாடுகளுக்கு செல்பவர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும். அதேவேளையில் எந்தெந்த நாடுகளில் இந்த போன் மூலம் ரோமிங் வசதியை பெற முடியும் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

. இந்த போனுக்கு அமெரிக்காவில் $199.99 (ரூ.8,900) விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிய சந்தையில் ஃபோட்டான் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை மோட்டோரோலா தகவல்கள்  எதையும் வெளியிடவில்லை.






Sunday, August 7, 2011

எக்ஸ்பீரியா ஆர்க் Vs எக்ஸ்பீரியா ரே





சோனி எரிசன் மொபைல்கள்தான் சிறந்தது என்று சிலர் கருதுகின்றனர். அவர்கள் சொல்வதில் மிகவும் உண்மை இருக்கிறது. ஏனெனில் சில நேரங்களில் யாருமே தம்மோடு போட்டி போட முடியாத அளவிற்கு மிக தரமான கேமரா வசதியுடன் கூடிய நல்ல மொபைல்களையும், ஸ்மார்ட் போன்களையும் சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன. அவற்றில் இரண்டுதான் அவர்கள் இப்பொழுது அறிமுகப்படுத்தியிருக்கிற எக்ஸ்பீரியா ஆர்க் மற்றும் எக்ஸ்பீரியா ரேய்.

இவை இரண்டுமே பார்ப்பதற்கு ஸ்டைலாகவும் மற்றும் எல்லா நவீன வசதிகளையும் கொண்டுள்ளன.

சோனி எரிசன் எக்ஸ்பீரியா ஆர்க் மிகப் பெரிய 4.2 இன்ச் அளவுள்ள தொடுதிரை டிஸ்பிளேயை கொண்டுள்ளது. ஆனால் ரே 3.3 அளவுள்ள தொடுதிரை டிஸ்பிளேயை கொண்டுள்ளது. ஆனால் இரண்டுமே மிகவும் சிறப்பாக உள்ளன. ஆனால் ஆர்க் பெரிய திரையை கொண்டிருப்பதால் தரமான வீடியோ ரிசலூஷனையும் உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது.

பொதுவாக கேமராவைப் பொறுத்த வரை சோனி எரிக்ஸனை எவரும் வீழ்த்த முடியாத அளவிற்கு தரமாக இருக்கும். அதுபோல் இந்த இரண்டு புதிய மொபைல்களிலும் மிகச் சிறந்த கேமரா வசதி உள்ளது. இரண்டுமே 8 மெகா பிகஸல் கேமராவுடன், தரமான வீடியோ ரிக்கார்டிங்குடன் 1080பி வீடியோ ரிசலூசனை பெற்றிருக்கிறது.

இரண்டுமே மற்ற ஸ்மார்ட் போன்களைவிட பொழுதுபோக்கு அம்சங்களான ஆடியோ மற்றும் வீடியோ பைல்களைக் கொண்டுள்ளது. எம்பி3 மற்றும் எம்பி4 போன்ற மியூசிக் பார்மட்களையும் தரமான வீடியோ பார்மட்களையும் கொண்டுள்ளன. ஆர்க் மறறும் ரே எஃப்எம் மற்றும் அட்டகாசமான 3.3எம்எம் யுனிவர்சல் ஜாக்கையும் பெற்றிருக்கின்றன.

மேலும் இவை ஆன்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர்போர்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதால் இதன் செய்திறன் பக்காவாக உள்ளது. மேலும் இவை 32ஜிபி விரிவுபடுத்தக்கூடிய புற மற்றும் அக சேமிப்பு வசதிகளையும் கொண்டிருக்கின்றன. இவை 3ஜி, வைபை மற்றும் ப்ளூடூத் நுட்பங்களையும் பெற்றுள்ளதும் இதனுடைய சிறப்பம்சமாகும்.

இதன் விலை இன்னும் தெரியவில்லை என்றாலும் மார்கட்டில் இதன் போட்டி கடுமையாக இருக்கும் என நம்பலாம்

.



Saturday, August 6, 2011

டெல் ஸ்ட்ரீக்-10 மற்றும் சோனி எஸ்-1 டேப்லெட்டுகள் ஒப்பீடு


 புகழ்பெற்ற சோனி நிறுவனம் சமீபத்தில் எஸ்-1 என்ற குறியீட்டு பெயரில் அறிமுகம் செய்துள்ள டேப்லெட் போனையும், கம்ப்யூட்டர் தயாரிப்பில் பிரபலமான டெல் அறிமுகம் செய்துள்ள ஸ்ட்ரீக்-10 டேப்லெட் போனின் சிறப்பம்சங்களின் ஒப்பீட்டை காணலாம்.


முதலில் டிஸ்பிளே மற்றும் வடிவமைப்பை பார்க்கலாம். டெல் ஸ்ட்ரீக்-10 டேப்லெட் 5 இஞ்ச் எல்சிடி டிஸ்பிளேவுடனும், சோனி எஸ்-1 டேப்லெட் 9.4 இஞ்ச் டிஎப்டி டிஸ்பிளேவுடனும் வந்துள்ளது. இதில், சோனி எஸ்-1 டிஸ்பிளே பெரிதாக இருந்தாலும், எல்சிடி டிஸ்பிளே இல்லாதது பெரிய குறையாக தெரிகிறது.



இரண்டு டேப்லெட் போன்களும் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தை கொண்டது. இதில், டெல் ஸ்ட்ரீக் வி-2.2 ப்ரேயோ வெர்ஷனையும், சோனி எஸ்-1 ஆன்ட்ராய்டு 10.3 ஹனிகோம்ப் இயங்கு தளத்தையும் கொண்டிருக்கிறது. சோனி எஸ்-1 டேப்லெட்டில் என்விடிஐஏ டெக்ரா-250 டியூவல் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. அதே டெல் ஸ்ட்ரீக்-10 போனில் க்யூவல்காம் 1 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்நாப்டிராகன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதில், சோனி எஸ்-1 விஞ்சுகிறது.


சோனி எஸ்-1 டேப்லெட்டில் சோனி கிரையோசிட்டி பிளாட்பார்ம் இணைந்த மியூசிக் சாப்ட்வேரை கொண்டுள்ளதால் இசை மழையில் உங்களை நனைக்கும். ஆனால், டெல் ஸ்டீரிக் ஆடியோ பார்மெட்டில் சிறப்பாக இயக்கினாலும், சோனி எஸ்-1 அளவுக்கு இல்லை.


மற்ற எந்த டேப்லெட் போன்களிலும் இல்லாத வகையில் ப்ளேஸ்டேஷன்-1 மற்றும் ப்ளேஸ்டேஷன்-2 ஆகிய வசதியை கொண்டிருக்கும் சோனி எஸ்-1ல் வீடியோ கேம்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளதால், வாங்கியவுடனே வீடியோ கேம்களை ஆடலாம்.


புளூடூத், யுஎஸ்பி போர்ட் மற்றும் வைஃபை வசதிகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் இரண்டு பக்கங்களை திறக்கும் வசதியும் சோனி எஸ்-1ல் இருக்கிறது. இந்த வசதி டெல் ஸ்ட்ரீக்கில் இல்லை.


டெல் ஸ்டீரீக் டேப்லெட் போன் ரூ.20.250 விலையில் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகிறது. ஆனால், சோனி எஸ்-1 மார்க்கெட்டில் விற்பனைக்கு வரவில்லை. அதேவேளை இந்த போன் ரூ.27,000 விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல் ஸ்டீரீக் டேப்லெட் போன் :







add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...