onlne

Tuesday, November 8, 2011

அட்ரீனோ கிராபிக் பிராசஸருடன் புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்

புதிய புதிய மொபைல்களை வழங்குவதைவிட, அந்த புதிய மொபைல்களில் என்ன புதிய தொழில் நுட்பத்தினை வழங்கலாம் என்று யோசித்து செயல்பட்டு வருகிறது மோட்டோரோலா மொபைல். எக்ஸ்டி-319 என்ற மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது இந்நிறுவனம். 

ஆன்ட்ராய்டு 2.3.4 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்கும் இந்த மொபைலின் திரை 320 X 480 பிக்ஸல் துல்லியத்தை கொண்டது. 

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க 800 எம்எச்இசட் சிங்கிள் கோர் எம்எஸ்எம்7227டி-1 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட் மொபைலில் பிக்சர்ஐடி மற்றும் ரிங்டோன் ஐடி சவுகரியமும் உள்ளது. இதில் உள்ள 0.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்புக் கேமராவின் மூலம் வீடியோ சாட் வசதியினைப் பெற முடியும். 

அதோடு இதில் மற்றுமொரு 3 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. இதனால் ஏராளமாக புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் எடுக்கலாம். 

அட்ரினோ 200 கிராஃபிகஸ் பிராசஸர், இதன் சிறப்பு என்று கூறலாம். இது மைக்ரோஎஸ்டி மற்றும் மைக்ரோஎச்எஸ்டி ஸ்லாட்டுகளை கொண்டிருப்பதால் சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளும் சவுகரியத்தையும் கொண்டது.

இதன் ஸ்டோரேஜ் வசதியினை 32ஜிபி வரை விரிவுபடுத்தலாம். 512எம்பி ரோம் மற்றும் 512எம்பி ரேம் வசதியும் இதில் உள்ளது. 

Sunday, November 6, 2011

அனைத்து வசதிகளுடன் மலிவு விலையில் மேக்ஸ் மொபைல்

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மொபைல் உலகில், சிறந்த மொபைல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது இந்திய நிறுவனமான மேக்ஸ். அதோடு நீடித்து உழைக்கும் பேட்டரியையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது மேக்ஸ். 

வெயில் காலம், மழைக் காலம் என்பது போல இது டச் ஸ்கிரீன் மொபைல் காலம் என்று கூறலாம். ஏனெனில் வாடிக்கையாளர்கள் அதிகமான தொடுதிரை தொழில் நுட்பம் கொண்ட மொபைல்களை விரும்புகின்றனர். 

இதனால் ஒவ்வொரு நிறுவனமும் நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்த ரக மொபைல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் டச் ஸ்கிரீன் மொபைல்களுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. 

இந்த சமயத்தில் மற்ற மொபைல்களுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு ஸிப்பி எம்டி-105 என்ற டச் ஸ்கிரீன் மொபைலை நேற்று வெளியிட்டிருக்கிறது மேக்ஸ் நிறுவனம்.

இரண்டு சிம் நெட்வொர்குகளை ஆப்பரேட் செய்ய இதில் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2.4 இஞ்ச் திரை கொண்ட ட்எப்டி ஃபுல் டச் ஸ்கிரீன் மொபைல் மூலம் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்திய சந்தோஷத்தையும், வெற்றியையும் கொண்டாட காத்திருக்கிறது மேக்ஸ். 

இந்த எம்டி-105 மொபைலில் நிறைய மல்டிமீடியா வசதியும் உள்ளது. ப்லெய்ன் ப்ளாக் வித் புளூ, மெட்டாலிக் ரெட் மற்றும் ஃபன்க்கி ஆரன்ச் போன்ற கண்கவரும் நிறங்களிலும் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீடியோ ரெக்காரடிங், டிஜிட்டல் சூம் வசதி கொண்ட இதன் கேமரா 640 X 480 பிக்ஸல் துல்லியத்தை வழங்குகிறது. இதில் உள்ள பிஏடி05 பேட்டரி 3 இருந்து 4 மணி நேரம் டாக் டைமையும் மற்றும் , 400 இருந்து 450 மணி நேரம் வரை ஸ்டான்-பை டைமையும் வழங்குகிறது.

115கேபி இன்டர்னல் மெமரியும், 64 எம்பி சிஸ்டம் மெமரியும் இதில் பயன்படுத்த முடியும்.

இதன் எக்ஸ்டர்னல் மெமரி கார்டு வசதியினை 4ஜிபி வரையில் விரிவுபடுத்திக் கொள்ளலாம். மியூசிக், வீடியோ ப்ளேயர் ஃபார்மெட்டுகளுக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் புளூடூத், ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பத்திற்கும் உதவுகிறது. 

அதோடு இந்த மொபைலில் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் டைப் செய்ய சப்போர்ட் செய்கிறது.ஃபுல் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட மேக்ஸ் எம்டி-105 மொபைல் ரூ.2,550 விலையை ஒட்டி கிடைக்கிறது

Thursday, November 3, 2011

சிறுவர்களுக்காக வரும் புதிய மொபைல்போன்: பேஸிக் அறிமுகப்படுத்துகிறது

அட! குழந்தைகளிடம் இருந்து மொபைலை பாதுகாத்துக் கொண்டிருப்பதிலேயே பாதிநேரம் செலவாகிறதா? மொபைலில் உள்ள பேட்டரியை கேம் விளையாடியே தீர்த்துவிடுகிறார்களா? 

இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ பிரச்சனைக்குத் தீர்வு இருக்கும்பொழுது இது ஒரு பிரச்சனையா!? 

மதி நுட்பம் வாய்ந்த நமது தொழில் நுட்ப நிபுணர்கள் இதற்கு ஒரு அருமையான தீர்வை கண்டுபிடித்திருக்கிறார்கள். இமினி என்ற புதிய மியூசிக் மொபைலை பேசிக் நிறுவனம் அறிமும் செய்திருக்கிறது. இது அடிப்படையில் கொரியன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம். 

இந்த மொபைல் நவம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும். இந்த இமினி மொபைல் ஒரு மியூசிக் மொபைல்போன். இது குழந்தைகள் இசை கேட்டு மகிழ்வதற்காகவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 

சிறியவர்களாகிய குழந்தைகளின் பிஞ்சு விரல்களுக்கு ஏற்ற வகையில் இந்த மொபைல் குட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், கைக்கு கச்சிதமாக இருக்கும். கையில் ஒரு கைக்குட்டை வைத்திருப்பதும், இந்த மொபைலை வைத்திருப்பதும் ஒன்றுதான் என்பதை இந்த மொபைலை பயன்படுத்தும் பொழுது தெரியும். 

குழந்தைகளுக்கு மொபைலா? என்ற எண்ணமே தேவையில்லை. அதோடு குழந்தைகள் இசை கேட்பது மனதிற்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என்று நிறைய விஞ்ஞான மருத்துவர்களும் கூறியிருப்பதைக் கேட்டிருப்பீர்கள். 

ஆகையினாலே இந்த இமினி மியூசிக் போன் குழந்தைகளுக்கு ஏற்ற பயனைத் தரும். இந்த குட்டி மொபைல் வெறும் 40 கிராம் எடை கொண்டதால் கணம் இருக்காது, எளிதாக கையாளலாம்.

இமினிமொபைலின் திரையை உங்கள் கட்டை விரல் கொண்டு எளிதாக மறைத்துவிட முடியும். அத்தகைய குட்டித் திரையை கொண்டுள்ளது. ஆனால் குழந்தைகளின் கண்களுக்கு இந்த திரை அளவு போதுமானது. 

மியூசிக் வசதி மட்டும்தானா என்று நினைத்துவிடாதீர்கள். இன்னும் பல ஆச்சர்யமூட்டும் அரிய வசதிகள் காத்திருக்கிறது. 

இதில் உள்ள 1ஜிபி மெமரி வசதியின் மூலம் தேவையான பாடல்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அதே சமயம் எப்எம் ரேடியோவில் உள்ள இசையையும் கூடுதலாகக் கேட்டு மகிழ முடியும். 

ஸ்டீரியோ ஹெட்செட், அலாரம், வைப்ரேஷன், ரிங் டோன் போன்ற வசதிளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதற்கே இப்படி திகைத்துவிட்டால் இன்னும் மீதியையும் கேட்டால் இன்றே இந்த மொபைலை கண்கள் தேட ஆரம்பித்துவிடும். இந்த இமினி மொபைல் டியூவல் சிம் போன் வசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இதை கேட்டால் அட! இந்த குட்டி மொபைலுக்குள் சுட்டிகளின் குட்டி உலகமே இயங்குவது புரியும். இ-மெயில், மியூசிக் ப்ளேயர் போன்ற வசதிகளைப் பெற தனிப்பட்ட பட்டன்கள் உள்ளது. இதனால் மிக சுலபமாக இந்த வசதிகளை இயக்க முடியும். 

இமினி 400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அளவான டாக் டைம் மற்றும் ஸ்டான்பை-டைமை வழங்குகிறது. 

குழந்தைகளின் உலகத்திற்குள் நுழைய புதிய அவதாரம் எடுத்திருக்கும் இந்த இமினி மியூசிக் மொபைல் ரூ.3,400 விலை கொண்டது. இதில் இன்னொரு வெர்ஷனும் உருவாக்கப்பட்டிருக்கிறது அதன் விலை ரூ.3,900. 

வரப்போகும் கிரிஸ்மஸ் பண்டிகைக்கு குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசாக பேஸிக் இமினி மியூசிக் மொபைல்போன் இருக்கும் என்று தோன்றுகிறது.

Monday, October 31, 2011

4.3 இஞ்ச் திரையுடன் வரும் புதிய ஹைவேரியண்ட் ஸ்மார்ட்போன்


நாளுக்கு நாள் அதிகரிக்கும் மொபைல் போட்டியை சொல்ல வார்த்தைகளே இல்லை. அதே போல் மக்களுக்கு மொபைல் மேல் உள்ள மோகமும் குறையவில்லை. 

இதனால் புதிய புதிய நிறுவனங்களும் அதி நுட்ப சேவைகளை வழங்கும் வகையில் மொபைல்களைக் உருவாக்கித் தருகின்றது. 

எந்த எந்த வகையில் வாடிக்கையாளர்கள் வேலையை எளிதாக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்கள் என்பதையும் புரிந்து கொண்டு, அதற்கேற்ப சவுகரியங்களை அனைத்து நிறுவனங்களும் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. 

வின்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் எக்ஸ்பி போன்-2 மொபைலை வெளியிட திட்டமிட்டுள்ளது ஐடிஜி நிறுவனம். இந்த மொபைலுடைய சிறப்பு என்னவென்றால் இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்கும் ஸ்மார்ட் மொபைல். இந்த மொபைல் 4.3 இஞ்ச் அகன்ற திரையை கொண்டது. 

இது லெட் தொழில் நுட்பத்தையும், தொடுதிரை வசதியையும் சேர்த்துக் கொடுக்கிறது. ஐடிஜி நிறுவனம் எக்ஸ்பி போன்-2 என்ற தனது இரண்டாவது படைப்பை பந்தையத்தில் இறக்க உள்ளது. இந்த மொபைல் மக்களுக்கு பிடிக்கும் லேட்டஸ்டு மாடல் என்று கூறலாம். 

இதன் தனித்துவத்தை வடிவமைப்பிலேயே காட்டிவிடுகிறது இந்த புதிய மொபைல். எக்ஸ்பிபோன்2 மொபைல் 1.6 ஜிஎச்இசட் பிராசஸர் துணை கொண்டது. இந்த பிராசஸர் மூலம், விண்டோஸ் 8 ஓஎஸ் எளிதாக இயங்க முடியும். ஏனென்றால் இதில் அதி நவீன தொழில் நுட்பங்கள் பயண்படுத்தப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட் மொபைல் என்றாலே அனைத்து வகையிலும் சவுகரியத்தைக் கொடுக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள். இதை மனதில் கொண்டு டைப் செய்வதில் கூட கியூவர்டி கீப்பேட் வசதியினை அளித்திருக்கிறது இந்நிறுவனம். 

இந்த மொபைல் அதிக மெமரி வசதியைக் கொண்டுள்ளது. இதில் உள்ள மெமரி வசதியை 112 ஜிபி வரை வேண்டுமானலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம். இன்றைய தேதியில், அசர வைக்கும் மெமரி வசதி கொண்ட ஸ்மார்ட் மொபைல் இதுவே என்று கூறலாம். 

இத்தனை வசதிகளையும் தெரிந்த பின்பு மக்களின் ஆர்வம் பேட்டரியின் தறத்தை நோக்கி செல்லும் என்பதும் புரிகிறது. 13 மணி நேரத்திற்கு குறைவில்லாமல் டாக் டைமை பெற முடியும். இந்த வசதி வாடிக்கையாளர்கள் எதிர் பார்க்கும் ஒரு முக்கிய தேவை. அதோடு 5 நாட்களுக்கு தொடர்ந்து ஸ்மான்-பை டைமும் அளிக்கிறது எக்ஸ்பிபோன்-2 மொபைல். 

இந்த புதிய மொபைலின் பல முக்கிய அம்சங்கள் இன்னும் வெளிடப்படாமல் ரகசியமாகவே உள்ளது. இதன் கேமரா வசதி பற்றி தகவல்களைக் கூட வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது இந்நிறுவனம். 

விண்டோஸ் 8 ஓஎஸ் போன்ற உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட இந்த மொபைல் அனைத்து வசதிகளின் அடிப்படையிலும், சிறப்பான விஷயங்களையே மக்களுக்கு அளிக்கும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

Thursday, October 20, 2011

ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட புதிய சாம்சங் டிரான்ஸ்ஃபிக்ஸ் மொபைல்

டிரான்ஸ்ஃபிக்ஸ் என்ற ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் மொபைலில் சிங்கில் கோர் கியூவல்காம் ஏஆர்எம் 9 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது 800 மெகாஹெர்ட்ஸ் செயல் வேகம் கொண்டது. இந்த புதிய மொபைல் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர்களுக்கு சப்போர்ட் செய்கிறது. இதில் யூடியூப் ப்ளேயர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 3.2 இஞ்ச் திரை வசதி கொண்டது. 320 X 480 பிக்ஸல் திரை வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மெமரி ஸ்டோரேஜ் வசதியை 125 எம்பி வரை வேண்டுமானாலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம். அதிகமான மெமரி வசதி உள்ளதால் அதிக அளவு தகவல்களையும் பதிவு செய்ய முடியும். இந்த ஸ்மார்ட்மொபைலில் ஜிபிஎஸ் நேவிகேஷன் தொழில் நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு இந்த மொபைல் வெறும் 125 கிராம் இலகு எடை கொண்டது.

சாம்சங் டிரான்ஸ்ஃபிக்ஸ் மொபைலில் நெட்வொர்க் வசதிக்காக வைபையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு புளூடூத் மற்றும் யூஎஸ்பி 2.0 போர்ட் வசதியும் உள்ளதால் தகவல் பரிமாற்றமும், தகவல்கள் பதிவேற்றமும் எளிதாக நிகழ்த்தலாம்.அனைவரும் எதிர் பார்க்கின்ற 3ஜி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது வெப் அப்ளிக்கேஷன் கொண்ட ஸ்மார்ட் மொபைலாகும். 1,500 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 3 மணி நேரம் டாக் டைமும், 200 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கிடைக்கிறது. சாம்சங் டிரான்ஸ்பிக்ஸ் மொபைல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும்பொழுது ரூ.9,000 விலையை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...