onlne

Tuesday, November 8, 2011

அட்ரீனோ கிராபிக் பிராசஸருடன் புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்

புதிய புதிய மொபைல்களை வழங்குவதைவிட, அந்த புதிய மொபைல்களில் என்ன புதிய தொழில் நுட்பத்தினை வழங்கலாம் என்று யோசித்து செயல்பட்டு வருகிறது மோட்டோரோலா மொபைல். எக்ஸ்டி-319 என்ற மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது இந்நிறுவனம். 

ஆன்ட்ராய்டு 2.3.4 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்கும் இந்த மொபைலின் திரை 320 X 480 பிக்ஸல் துல்லியத்தை கொண்டது. 

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க 800 எம்எச்இசட் சிங்கிள் கோர் எம்எஸ்எம்7227டி-1 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட் மொபைலில் பிக்சர்ஐடி மற்றும் ரிங்டோன் ஐடி சவுகரியமும் உள்ளது. இதில் உள்ள 0.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்புக் கேமராவின் மூலம் வீடியோ சாட் வசதியினைப் பெற முடியும். 

அதோடு இதில் மற்றுமொரு 3 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. இதனால் ஏராளமாக புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் எடுக்கலாம். 

அட்ரினோ 200 கிராஃபிகஸ் பிராசஸர், இதன் சிறப்பு என்று கூறலாம். இது மைக்ரோஎஸ்டி மற்றும் மைக்ரோஎச்எஸ்டி ஸ்லாட்டுகளை கொண்டிருப்பதால் சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளும் சவுகரியத்தையும் கொண்டது.

இதன் ஸ்டோரேஜ் வசதியினை 32ஜிபி வரை விரிவுபடுத்தலாம். 512எம்பி ரோம் மற்றும் 512எம்பி ரேம் வசதியும் இதில் உள்ளது. 

Sunday, November 6, 2011

அனைத்து வசதிகளுடன் மலிவு விலையில் மேக்ஸ் மொபைல்

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மொபைல் உலகில், சிறந்த மொபைல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது இந்திய நிறுவனமான மேக்ஸ். அதோடு நீடித்து உழைக்கும் பேட்டரியையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது மேக்ஸ். 

வெயில் காலம், மழைக் காலம் என்பது போல இது டச் ஸ்கிரீன் மொபைல் காலம் என்று கூறலாம். ஏனெனில் வாடிக்கையாளர்கள் அதிகமான தொடுதிரை தொழில் நுட்பம் கொண்ட மொபைல்களை விரும்புகின்றனர். 

இதனால் ஒவ்வொரு நிறுவனமும் நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்த ரக மொபைல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் டச் ஸ்கிரீன் மொபைல்களுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. 

இந்த சமயத்தில் மற்ற மொபைல்களுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு ஸிப்பி எம்டி-105 என்ற டச் ஸ்கிரீன் மொபைலை நேற்று வெளியிட்டிருக்கிறது மேக்ஸ் நிறுவனம்.

இரண்டு சிம் நெட்வொர்குகளை ஆப்பரேட் செய்ய இதில் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2.4 இஞ்ச் திரை கொண்ட ட்எப்டி ஃபுல் டச் ஸ்கிரீன் மொபைல் மூலம் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்திய சந்தோஷத்தையும், வெற்றியையும் கொண்டாட காத்திருக்கிறது மேக்ஸ். 

இந்த எம்டி-105 மொபைலில் நிறைய மல்டிமீடியா வசதியும் உள்ளது. ப்லெய்ன் ப்ளாக் வித் புளூ, மெட்டாலிக் ரெட் மற்றும் ஃபன்க்கி ஆரன்ச் போன்ற கண்கவரும் நிறங்களிலும் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீடியோ ரெக்காரடிங், டிஜிட்டல் சூம் வசதி கொண்ட இதன் கேமரா 640 X 480 பிக்ஸல் துல்லியத்தை வழங்குகிறது. இதில் உள்ள பிஏடி05 பேட்டரி 3 இருந்து 4 மணி நேரம் டாக் டைமையும் மற்றும் , 400 இருந்து 450 மணி நேரம் வரை ஸ்டான்-பை டைமையும் வழங்குகிறது.

115கேபி இன்டர்னல் மெமரியும், 64 எம்பி சிஸ்டம் மெமரியும் இதில் பயன்படுத்த முடியும்.

இதன் எக்ஸ்டர்னல் மெமரி கார்டு வசதியினை 4ஜிபி வரையில் விரிவுபடுத்திக் கொள்ளலாம். மியூசிக், வீடியோ ப்ளேயர் ஃபார்மெட்டுகளுக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் புளூடூத், ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பத்திற்கும் உதவுகிறது. 

அதோடு இந்த மொபைலில் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் டைப் செய்ய சப்போர்ட் செய்கிறது.ஃபுல் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட மேக்ஸ் எம்டி-105 மொபைல் ரூ.2,550 விலையை ஒட்டி கிடைக்கிறது

Thursday, November 3, 2011

சிறுவர்களுக்காக வரும் புதிய மொபைல்போன்: பேஸிக் அறிமுகப்படுத்துகிறது

அட! குழந்தைகளிடம் இருந்து மொபைலை பாதுகாத்துக் கொண்டிருப்பதிலேயே பாதிநேரம் செலவாகிறதா? மொபைலில் உள்ள பேட்டரியை கேம் விளையாடியே தீர்த்துவிடுகிறார்களா? 

இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ பிரச்சனைக்குத் தீர்வு இருக்கும்பொழுது இது ஒரு பிரச்சனையா!? 

மதி நுட்பம் வாய்ந்த நமது தொழில் நுட்ப நிபுணர்கள் இதற்கு ஒரு அருமையான தீர்வை கண்டுபிடித்திருக்கிறார்கள். இமினி என்ற புதிய மியூசிக் மொபைலை பேசிக் நிறுவனம் அறிமும் செய்திருக்கிறது. இது அடிப்படையில் கொரியன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம். 

இந்த மொபைல் நவம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும். இந்த இமினி மொபைல் ஒரு மியூசிக் மொபைல்போன். இது குழந்தைகள் இசை கேட்டு மகிழ்வதற்காகவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 

சிறியவர்களாகிய குழந்தைகளின் பிஞ்சு விரல்களுக்கு ஏற்ற வகையில் இந்த மொபைல் குட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், கைக்கு கச்சிதமாக இருக்கும். கையில் ஒரு கைக்குட்டை வைத்திருப்பதும், இந்த மொபைலை வைத்திருப்பதும் ஒன்றுதான் என்பதை இந்த மொபைலை பயன்படுத்தும் பொழுது தெரியும். 

குழந்தைகளுக்கு மொபைலா? என்ற எண்ணமே தேவையில்லை. அதோடு குழந்தைகள் இசை கேட்பது மனதிற்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என்று நிறைய விஞ்ஞான மருத்துவர்களும் கூறியிருப்பதைக் கேட்டிருப்பீர்கள். 

ஆகையினாலே இந்த இமினி மியூசிக் போன் குழந்தைகளுக்கு ஏற்ற பயனைத் தரும். இந்த குட்டி மொபைல் வெறும் 40 கிராம் எடை கொண்டதால் கணம் இருக்காது, எளிதாக கையாளலாம்.

இமினிமொபைலின் திரையை உங்கள் கட்டை விரல் கொண்டு எளிதாக மறைத்துவிட முடியும். அத்தகைய குட்டித் திரையை கொண்டுள்ளது. ஆனால் குழந்தைகளின் கண்களுக்கு இந்த திரை அளவு போதுமானது. 

மியூசிக் வசதி மட்டும்தானா என்று நினைத்துவிடாதீர்கள். இன்னும் பல ஆச்சர்யமூட்டும் அரிய வசதிகள் காத்திருக்கிறது. 

இதில் உள்ள 1ஜிபி மெமரி வசதியின் மூலம் தேவையான பாடல்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அதே சமயம் எப்எம் ரேடியோவில் உள்ள இசையையும் கூடுதலாகக் கேட்டு மகிழ முடியும். 

ஸ்டீரியோ ஹெட்செட், அலாரம், வைப்ரேஷன், ரிங் டோன் போன்ற வசதிளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதற்கே இப்படி திகைத்துவிட்டால் இன்னும் மீதியையும் கேட்டால் இன்றே இந்த மொபைலை கண்கள் தேட ஆரம்பித்துவிடும். இந்த இமினி மொபைல் டியூவல் சிம் போன் வசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இதை கேட்டால் அட! இந்த குட்டி மொபைலுக்குள் சுட்டிகளின் குட்டி உலகமே இயங்குவது புரியும். இ-மெயில், மியூசிக் ப்ளேயர் போன்ற வசதிகளைப் பெற தனிப்பட்ட பட்டன்கள் உள்ளது. இதனால் மிக சுலபமாக இந்த வசதிகளை இயக்க முடியும். 

இமினி 400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அளவான டாக் டைம் மற்றும் ஸ்டான்பை-டைமை வழங்குகிறது. 

குழந்தைகளின் உலகத்திற்குள் நுழைய புதிய அவதாரம் எடுத்திருக்கும் இந்த இமினி மியூசிக் மொபைல் ரூ.3,400 விலை கொண்டது. இதில் இன்னொரு வெர்ஷனும் உருவாக்கப்பட்டிருக்கிறது அதன் விலை ரூ.3,900. 

வரப்போகும் கிரிஸ்மஸ் பண்டிகைக்கு குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசாக பேஸிக் இமினி மியூசிக் மொபைல்போன் இருக்கும் என்று தோன்றுகிறது.

Monday, October 31, 2011

4.3 இஞ்ச் திரையுடன் வரும் புதிய ஹைவேரியண்ட் ஸ்மார்ட்போன்


நாளுக்கு நாள் அதிகரிக்கும் மொபைல் போட்டியை சொல்ல வார்த்தைகளே இல்லை. அதே போல் மக்களுக்கு மொபைல் மேல் உள்ள மோகமும் குறையவில்லை. 

இதனால் புதிய புதிய நிறுவனங்களும் அதி நுட்ப சேவைகளை வழங்கும் வகையில் மொபைல்களைக் உருவாக்கித் தருகின்றது. 

எந்த எந்த வகையில் வாடிக்கையாளர்கள் வேலையை எளிதாக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்கள் என்பதையும் புரிந்து கொண்டு, அதற்கேற்ப சவுகரியங்களை அனைத்து நிறுவனங்களும் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. 

வின்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் எக்ஸ்பி போன்-2 மொபைலை வெளியிட திட்டமிட்டுள்ளது ஐடிஜி நிறுவனம். இந்த மொபைலுடைய சிறப்பு என்னவென்றால் இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்கும் ஸ்மார்ட் மொபைல். இந்த மொபைல் 4.3 இஞ்ச் அகன்ற திரையை கொண்டது. 

இது லெட் தொழில் நுட்பத்தையும், தொடுதிரை வசதியையும் சேர்த்துக் கொடுக்கிறது. ஐடிஜி நிறுவனம் எக்ஸ்பி போன்-2 என்ற தனது இரண்டாவது படைப்பை பந்தையத்தில் இறக்க உள்ளது. இந்த மொபைல் மக்களுக்கு பிடிக்கும் லேட்டஸ்டு மாடல் என்று கூறலாம். 

இதன் தனித்துவத்தை வடிவமைப்பிலேயே காட்டிவிடுகிறது இந்த புதிய மொபைல். எக்ஸ்பிபோன்2 மொபைல் 1.6 ஜிஎச்இசட் பிராசஸர் துணை கொண்டது. இந்த பிராசஸர் மூலம், விண்டோஸ் 8 ஓஎஸ் எளிதாக இயங்க முடியும். ஏனென்றால் இதில் அதி நவீன தொழில் நுட்பங்கள் பயண்படுத்தப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட் மொபைல் என்றாலே அனைத்து வகையிலும் சவுகரியத்தைக் கொடுக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள். இதை மனதில் கொண்டு டைப் செய்வதில் கூட கியூவர்டி கீப்பேட் வசதியினை அளித்திருக்கிறது இந்நிறுவனம். 

இந்த மொபைல் அதிக மெமரி வசதியைக் கொண்டுள்ளது. இதில் உள்ள மெமரி வசதியை 112 ஜிபி வரை வேண்டுமானலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம். இன்றைய தேதியில், அசர வைக்கும் மெமரி வசதி கொண்ட ஸ்மார்ட் மொபைல் இதுவே என்று கூறலாம். 

இத்தனை வசதிகளையும் தெரிந்த பின்பு மக்களின் ஆர்வம் பேட்டரியின் தறத்தை நோக்கி செல்லும் என்பதும் புரிகிறது. 13 மணி நேரத்திற்கு குறைவில்லாமல் டாக் டைமை பெற முடியும். இந்த வசதி வாடிக்கையாளர்கள் எதிர் பார்க்கும் ஒரு முக்கிய தேவை. அதோடு 5 நாட்களுக்கு தொடர்ந்து ஸ்மான்-பை டைமும் அளிக்கிறது எக்ஸ்பிபோன்-2 மொபைல். 

இந்த புதிய மொபைலின் பல முக்கிய அம்சங்கள் இன்னும் வெளிடப்படாமல் ரகசியமாகவே உள்ளது. இதன் கேமரா வசதி பற்றி தகவல்களைக் கூட வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது இந்நிறுவனம். 

விண்டோஸ் 8 ஓஎஸ் போன்ற உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட இந்த மொபைல் அனைத்து வசதிகளின் அடிப்படையிலும், சிறப்பான விஷயங்களையே மக்களுக்கு அளிக்கும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

Thursday, October 20, 2011

ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட புதிய சாம்சங் டிரான்ஸ்ஃபிக்ஸ் மொபைல்

டிரான்ஸ்ஃபிக்ஸ் என்ற ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் மொபைலில் சிங்கில் கோர் கியூவல்காம் ஏஆர்எம் 9 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது 800 மெகாஹெர்ட்ஸ் செயல் வேகம் கொண்டது. இந்த புதிய மொபைல் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர்களுக்கு சப்போர்ட் செய்கிறது. இதில் யூடியூப் ப்ளேயர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 3.2 இஞ்ச் திரை வசதி கொண்டது. 320 X 480 பிக்ஸல் திரை வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மெமரி ஸ்டோரேஜ் வசதியை 125 எம்பி வரை வேண்டுமானாலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம். அதிகமான மெமரி வசதி உள்ளதால் அதிக அளவு தகவல்களையும் பதிவு செய்ய முடியும். இந்த ஸ்மார்ட்மொபைலில் ஜிபிஎஸ் நேவிகேஷன் தொழில் நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு இந்த மொபைல் வெறும் 125 கிராம் இலகு எடை கொண்டது.

சாம்சங் டிரான்ஸ்ஃபிக்ஸ் மொபைலில் நெட்வொர்க் வசதிக்காக வைபையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு புளூடூத் மற்றும் யூஎஸ்பி 2.0 போர்ட் வசதியும் உள்ளதால் தகவல் பரிமாற்றமும், தகவல்கள் பதிவேற்றமும் எளிதாக நிகழ்த்தலாம்.அனைவரும் எதிர் பார்க்கின்ற 3ஜி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது வெப் அப்ளிக்கேஷன் கொண்ட ஸ்மார்ட் மொபைலாகும். 1,500 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 3 மணி நேரம் டாக் டைமும், 200 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கிடைக்கிறது. சாம்சங் டிரான்ஸ்பிக்ஸ் மொபைல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும்பொழுது ரூ.9,000 விலையை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Sunday, October 16, 2011

பட்டையை கிளப்பும் இரட்டை திரையுடன் வரும் சாம்சங் ஆன்ட்ராய்டு மொபைல்





டபுள்டைம்என்ற புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். இதன் புதிய வசதிகள் வாடிக்கையாளர்களின் கண்களை விரிய வைக்கும் அளவு, சிறந்த தொழில் நுட்பங்கள் கொண்டது. டபுள்டைம்என்ற பெயர் இந்த மொபைலுக்கு பொருத்தமானது. ஏனென்றால் இதில் டபுல் சந்தோஷத்தைக் கொடுக்கும் க்ளாம்ஷெல் டியூவல் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைலில் 3.20 இஞ்ச் கொண்ட திரை ஒன்றும், மற்றொரு 3.02 இஞ்ச் கொண்ட தொடுதிரையும் கொடுக்கப்பட்டுள்ளது. இது 480 X 320 பிக்ஸல் துல்லியத்தையும் கொடுக்கிறது. அதோடு டைப் செய்வதற்கு எளிய வகையில் கியூவர்டிக் கீபேட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த டபுள்டைம்மொபைல் வெர்ஷன் 2.2 கொண்ட, ஆன்ட்ராய்டு 2.2 பிளாட்ஃபார்மில் இயங்குகிறது. 600 எம்எச்இசட் சிங்கில் கோர் பிராசஸர், ஆன்ட்ராய்டு பிளாட்ஃபார்ம் இயங்க உதவுகிறது. இந்த மொபைலில் 3.2 மெகா பிக்ஸல் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

260 எம்பி கொண்ட இன்டர்னல் மெமரி இருப்பதால் தேவையான தகவல்களை இதில் பதிவு செய்து கொள்ள முடியும். மைக்ரோஎஸ்டி மற்றும் மைக்ரோஎஸ்டிஎச்சி எக்ஸ்டர்னல் வசதியும் உள்ளது. இப்படி புதுமையான தொழில் நுட்பம் கொண்ட இந்த சாம்சங் டபுள்டைம்மொபைலின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


Sunday, October 9, 2011

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியாவின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம்

மலிவான விலையில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனைகளை நோக்கியா விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

எஸ்-40 பிளாட்பார்மில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான தொழில்நுட்ப வசதிகளை நோக்கியா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் மெல்டெமி என்ற பெயரில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நோக்கியா உருவாக்கி உள்ளது.

ரூ.5,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த நோக்கியா திட்டமிட்டு இருக்கிறது. இந்த புதிய மெல்டெமி ஆப்பரேட்டிங் சிஸ்டம் லினக்ஸ் சாப்ட்வேர் ப்ளாட்ஃபார்மில் இயங்கும் வகையில் வடிவைக்கப்பட்டுள்ளது.

நோக்கியாவின் இந்த குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட் மொபைல் சிறந்த விற்பனையைக் கொடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுவதாக இந்நிறுவனத்தின் உயர் அதிகாரியான மேரி மெக்டோனல் தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு நிறுவனங்கள் மார்க்கெட்டில் பட்ஜெட் விலை போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருவதால் நோக்கியா போன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் செக்மெண்ட்டில் நெருக்கடியை குறைத்துக்கொள்ள முடியும் என்று நோக்கியா கருதுகிறது.

மெல்டெமி ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட நோக்கியாவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் ரூ.5,000 விலைக்குள் மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, October 5, 2011

ஆன்ட்ராய்டு போன்களுக்கான புதிய மியூசிக் ப்ளேயர்



ஆன்ட்ராய்டு போன்களை விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இப்பொழுது இன்னொரு கூடுதல் வசதியும் கிடைக்க உள்ளது. ஜாம்காஸ்ட் எனும் மியூசிக் ப்ளேயர் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு காம்டெக்ஸ் அப்ளிக்கேஷன்.

இதன் மூலம் மியூசிக் அப்ளிக்கேஷன்களை ஆன்ட்ராய்டு 2.1 வெர்ஷன் மொபைல்களில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த வசதி இசை விரும்பிகளுக்கு ஒரு சிறந்த விருந்தாக இருக்கும். ஆன்ட்ராய்டு 2.1+ வெர்ஷன் போன்களில் உள்ள 3ஜி, 4ஜி மற்றும் வைபை வசதியின் மூலம் இந்த மியூசிக் அப்ளிகேஷன்களை எளிதாக டவுன்லோட் செய்ய முடியும்.

சாஃப்ட்வேர் டெவெலப்மென்ட் சொல்யூஷன் நிறுவனத்தின் உயர் அதிகாரியான ஸ்காட் ஸ்ட்ரீக்கர் இந்த மியூசிக் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தினார். இதில் காரில் டாக் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. இந்த சாஃப்ட்வேரை மிகவும் எளிதாக இணைக்க முடியும்.

இந்த புதிய மியூசிக் ப்ளேயரை http://getjamcast.com என்ற இணையத்தளத்தில் இருந்து மிக எளிதான முறையில் டவுண்லோடு செய்யலாம். இதன் ட்ரையல் வெர்ஷன் சாப்ட்வேரை ரூ.1,000 விலையில் 14 நாட்கள் செல்லுபடியாகத்தக்க வகையில் டவுண்லோடு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

Thursday, September 29, 2011

பட்டையை கிளப்பும் வளையும் தன்மை கொண்ட பேனல் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்!



ஸ்கின் என்ற பெயரில் புதிய மொபைலை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். கிராபின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மொபைல்போனின் பேனல் வளைந்து, நெளியும் தன்மை கொண்டது. கீழே விழுந்தாலும் உடையாது.

எதிர்கால தொழில்நுட்ப வசதிகொண்ட மொபைலாக சாம்சங் இந்த போனை சந்தையில் விரைவில் களமிறக்க உள்ளது. இந்த மொபைலின் எல்சிடி திரையும் வளைந்து நெளியும் என்பது கூடுதல் சிறப்பு.

இது 800 X 400 பிக்ஸல் ரிசல்யுஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் அமோல்டு தொழில் நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 8 மெகா பிக்ஸல் வசதி கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 1.2 ஜிஎச்இசட் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வசதி கொண்டது.

இன்றைய இந்திய சந்தையில் அமோல்டு திரை மற்றும் எல்சிடி வசதி கொண்ட மொபைல்கள் அதிக வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. இதனால் இந்த மொபைலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் மொபைலின் விலை இன்னும் 




Wednesday, September 28, 2011

பட்டையை கிளப்பும் டெல் XCD -35



டெல் எக்ஸ்சிடி-35 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது டெல் நிறுவனம். இதன் வடிவமைப்பு நிச்சயம் வாடிக்கையாளர்களை வாங்கத்தூண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது ஆன்ட்ராய்டு வசதி கொண்ட ஸ்மார்ட்போன்.

இந்த டெல் எக்ஸ்சிடி-35 மொபைல் 3.5 டிஎப்டி டச் ஸ்கிரீன் திரை கொண்டது. இதில் ஏஆர்எம் 11 600 எம்எச்இசட் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 3.2 எம்பி கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மொபைல் நிச்சயம் திருப்திகரமான புகைப்படத்தைக் கொடுக்கு்ம் என்று நம்பப்படுகிறது.

இந்த மொபைல் 3ஜி வசதிக்கு சப்போர்ட் செய்யும். டெல் எக்ஸ்சிடி-35 மொபைலில், வைபையின் மூலம் நெட் வசதியினைப் பெற முடியும். இதில் ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி வசதியும் உள்ளது.








இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ள யூஎஸ்பி வசதியினால் கணினியில் இருந்து தகவல்களைப் போனுக்கு எளிதாக பரிமாற்றம் செய்ய உதவுகிறது. இதில் டபிள்யூஏபி வசதியும் உள்ளது. இதன் மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 16 ஜிபி மெமரியைப் பெற முடியும். தகவல்களை எளிதாகப் பரிமாறிக் கொள்ள இதில் புளூடூத் வசதியும் உள்ளது. இந்த மொபைல் 200 எம்பி இன்டர்னல் மெமரியையும் வழங்குகிறது.

இது எட்ஜ் தொழில் நுட்பம் கொண்டது. இதன் எப்எம் ரேடியோ வசதியினைக் கேட்டு மகிழலாம். இதில் ஆடியோ மற்றும் வீடியோ வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.இந்திய சந்தையில் மதிப்பு ரூ.9,500 இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, September 25, 2011

4 சிம் கார்டு பொருத்தும் வசதியுடன் வரும் டெக்னோ மொபைல்

நான்கு சிம் கார்டுகளை பொருத்தும் வசதி கொண்ட மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது டெக்னோ நிறுவனம்.

4 சிம்களைக் கொண்ட மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது டெக்னோ நிறுவனம். இரண்டு சிம்களைப் பயன்படுத்திய காலம் போய் இப்பொழுது புதிய 4 சிம் கொண்ட புதிய மொபைல் வர இருக்கிறது. டி-4 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் அடுத்த மாதம் நெய்ரோபியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இந்த தகவலை டெக்னோ நிறுவன மார்கெட்டிங் மேனேஜர் திரு.ஆடம் ஜின் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். நோக்கியா, சாம்சங் போன்ற மொபைல் நிறுவனங்களுக்கு டெக்னோ மொபைலின் இந்த புதுமை சற்று கலக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் வசதியான வாய்ப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அனைத்து நிறுவனங்களும் டியூவல் சிம் வசதி கொண்ட மொபைலை தயாரித்து வெற்றி கண்ட நேரத்தில் சில நிறுவனங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட சிம்களை உருவாக்குவது பற்றி யோசித்திருப்பது மிகவும் அரிய விஷயமாகத் தோன்றுகிறது.

அந்த வகையில் டெக்னோ நிறுவனமும் இந்த பெருமைக்கு உரியதாகத் தெரிகிறது. இந்த மொபைல் முதலில் கென்யன் மார்கெட்டில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்திய சந்தையில் ரூ.15,000 விலையில் இருந்து தொடங்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது

Wednesday, September 21, 2011

மல்டி டச் ஸ்கிரீன் வசதியுடன் வரும் வியூவ்சோனிக் போன்









ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் மொபைலை வெளியிட உள்ளது வியூவ்சோனிக் நிறுவனம். இந்த மொபைல் மாடலில் 1 ஜிகாஹெர்ட்ஸ் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் சிங்கிள் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. வேகமாக செயல்படுவற்கு இது உதவுகிறது.

இந்த மாடல் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.2 பிரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது. இது 4.3 இஞ்ச் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டபிள்யூ மல்டி டச் ஸ்கிரீன் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 800 X 480 பிக்ஸல் கொண்டதாக இருக்கும். இதில் 512 எம்பி ரேம் வசதி உள்ளது.

இதன்மூலம், துல்லியமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்க முடியும். இதில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோவை ஆப்பரேட் செய்வது மிகவும் எளிதான ஒன்றாகும். எம்பி 4, எம்பி 3, டபிளயூஎம்ஏ, டபிள்யூஏவி போன்ற மீடியா பார்மெட்களை சப்போர்ட் செய்கிறது.

வியூசோனிக் வி-430 மொபைலில் விஜிஏ செகன்டரி முகப்பு கேமராவும், 5 மெகா பிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இது மிகவும் தெளிவான புகைப்படத்தைக் கொடுக்கிறது. இதன் மூலம் 3 ஜி கம்பாட்டிபிலிட்டி வசதியும் கிடைக்கிறது.

எளிதான முறையில் நெட் வசதியினைப் பெற வைபை, ஜிபிஎஸ், வி2.1 ஏ2டிபி புளூடூத் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் யூஎஸ்பி வசதியினைப்பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் இதில் யூஎஸ்பி வசதி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அனைவரையும் கவரும் வகையில் இதன் விலை இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.







Monday, September 19, 2011

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 3ம் தலைமுறை ஆப்பிள் ஐபேட்


ஆப்பிள் நிறுவனம் வடிவமைக்கும் அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெறுவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து வரும் ஆப்பிள் ஐபேட்-3 பற்றிய தகவல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட்டில் உலவி வருகின்றன.

கடைசியாக ஆப்பிள் ஐபேட்-3 ன் வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்கள் குறித்து சில பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது வெளியாகியுள்ள வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்களை காணலாம்.

1. இரண்டு மாடல்களில் ஐபேட்-3யை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில், ஒன்று 9.7 இஞ்ச் திரை கொண்டதாகவும், மற்றொன்று 7 இஞ்ச் திரையை கொண்டதாகவும் இருக்கும்.

2. இதுவரை இல்லாத வகையில் ஹைடெபினிஷன் மற்றும் கிராபிக்ஸ் வீடியோக்களை சப்போர்ட் செய்யும் அதிக துல்லியம் கொண்ட 'ரெட்டினா' டிஸ்ப்ளேயை கொண்டதாக ஐபேட்-3 வருகிறது.

3. ஆப்பிள் ஐபேட்-3 யில் 4 பிராசஸர்கள் கொண்ட ஏ-6 கோர் பிராசஸர் பொருத்தப்பட இருப்பதாக முன்பு கூறப்பட்டது. இது தற்போதைய ஐபேட்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஏ-5 பிராசஸர்களைவிட 30 சதவீதம் வேகமாகவும், 50 சதவீதம் அளவுக்கு பேட்டரியை மிச்சப்படும் ஆற்றல் கொண்டவையாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அந்த பிராசஸரை தயாரிக்கும் பணிகள் முழுமை பெறாததால், மற்ற ஐபேட்களில் பொருத்தப்பட்டிருக்கும் 2 பிராசஸர்கள் அடங்கிய ஏ-5 கோர் பிராசஸருடன் ஆப்பிள் ஐபேட்-3 வர இருப்பதாக கூறப்படுகிறது.

4. தற்போதைய ஐபேட்களின் முகப்பில் வீடியோ காலிங் வசதிக்கான விஜிஏ முகப்பு கேமராவும், பின்புறத்தில் 720பிக்ஸல் துல்லியத்தில் வினாடிக்கு 30 பிரேம்களில் வீடியோ எடுக்கும் திறன் கொண்ட கேமராவும் பொருத்தப்பட்டிருந்தது.
ஆனால், ஐபேட் வாடிக்கையாளர்கள் கேமராவின் திறன் பற்றி குறை கூறியது ஆப்பிள் நிறுவனத்தின் காதுக்கும் எட்டியிருக்கிறது. எனவே, ஐபேட்-3 யில் ப்ளாஷ் வசதியுடன் கூடிய ஆற்றல்வாய்ந்த 8 மெகாபிக்ஸல் கேமராவுடன் அறிமுகப்படுத்த உள்ளது ஆப்பிள்.

5. இவை எல்லாவற்றையும் விட ஐபேட்-3 யில் என்எப்சி சிப் பொருத்தப்பட்டு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்று ஐபேட்-3யை பயன்படுத்தி கடைகளில் பொருட்கள் வாங்க முடியும் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

6. ஐபேட்-2 வில் பெரும் குறையாக இருப்பது சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளும் வகையில் மெமரி கார்டு பொருத்துவதற்கான ஸ்லாட் இல்லாதது. ஆனால், இந்த குறையை ஐபேட்-3 தீர்த்து வைக்கும் என்று தெரிகிறது. ஆம், ஐபேட்-3யில் மைக்ரோஎஸ்டி ஸ்லாட்டுடன் வர இருக்கிறது.

7. ஐபேட்-3 யில் நீடித்த ஆற்றலை வழங்க வல்ல அளவில் மிகசிறிய பேட்டரி பொருத்தப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் அதிக ஆற்றல் கொண்ட இந்த பேட்டரியின் விலை தற்போதைய பேட்டரிகளைவிட 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. கம்ப்யூட்டர்களில் பயன்படும் நவீன தண்டர்போல்ட் தொழில்நுட்பம் ஐபேட்-3யில் அப்லோடு செய்யப்பட்டு வர இருக்கிறது. இதனால், கேபிள் வழியாக ஹைடெபினிஷன் கொண்ட சினிமாவை வெறும் 30 வினாடிகளுக்குள் ஐபேட் மூலம் பரிமாற்றம் செய்ய முடியும்.







நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 3ம் தலைமுறை ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் நிறுவனம் வடிவமைக்கும் அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெறுவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து வரும் ஆப்பிள் ஐபேட்-3 பற்றிய தகவல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட்டில் உலவி வருகின்றன.

கடைசியாக ஆப்பிள் ஐபேட்-3 ன் வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்கள் குறித்து சில பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது வெளியாகியுள்ள வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்களை காணலாம்.

1. இரண்டு மாடல்களில் ஐபேட்-3யை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில், ஒன்று 9.7 இஞ்ச் திரை கொண்டதாகவும், மற்றொன்று 7 இஞ்ச் திரையை கொண்டதாகவும் இருக்கும்.

2. இதுவரை இல்லாத வகையில் ஹைடெபினிஷன் மற்றும் கிராபிக்ஸ் வீடியோக்களை சப்போர்ட் செய்யும் அதிக துல்லியம் கொண்ட 'ரெட்டினா' டிஸ்ப்ளேயை கொண்டதாக ஐபேட்-3 வருகிறது.

3. ஆப்பிள் ஐபேட்-3 யில் 4 பிராசஸர்கள் கொண்ட ஏ-6 கோர் பிராசஸர் பொருத்தப்பட இருப்பதாக முன்பு கூறப்பட்டது. இது தற்போதைய ஐபேட்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஏ-5 பிராசஸர்களைவிட 30 சதவீதம் வேகமாகவும், 50 சதவீதம் அளவுக்கு பேட்டரியை மிச்சப்படும் ஆற்றல் கொண்டவையாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அந்த பிராசஸரை தயாரிக்கும் பணிகள் முழுமை பெறாததால், மற்ற ஐபேட்களில் பொருத்தப்பட்டிருக்கும் 2 பிராசஸர்கள் அடங்கிய ஏ-5 கோர் பிராசஸருடன் ஆப்பிள் ஐபேட்-3 வர இருப்பதாக கூறப்படுகிறது.

4. தற்போதைய ஐபேட்களின் முகப்பில் வீடியோ காலிங் வசதிக்கான விஜிஏ முகப்பு கேமராவும், பின்புறத்தில் 720பிக்ஸல் துல்லியத்தில் வினாடிக்கு 30 பிரேம்களில் வீடியோ எடுக்கும் திறன் கொண்ட கேமராவும் பொருத்தப்பட்டிருந்தது.
ஆனால், ஐபேட் வாடிக்கையாளர்கள் கேமராவின் திறன் பற்றி குறை கூறியது ஆப்பிள் நிறுவனத்தின் காதுக்கும் எட்டியிருக்கிறது. எனவே, ஐபேட்-3 யில் ப்ளாஷ் வசதியுடன் கூடிய ஆற்றல்வாய்ந்த 8 மெகாபிக்ஸல் கேமராவுடன் அறிமுகப்படுத்த உள்ளது ஆப்பிள்.

5. இவை எல்லாவற்றையும் விட ஐபேட்-3 யில் என்எப்சி சிப் பொருத்தப்பட்டு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்று ஐபேட்-3யை பயன்படுத்தி கடைகளில் பொருட்கள் வாங்க முடியும் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

6. ஐபேட்-2 வில் பெரும் குறையாக இருப்பது சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளும் வகையில் மெமரி கார்டு பொருத்துவதற்கான ஸ்லாட் இல்லாதது. ஆனால், இந்த குறையை ஐபேட்-3 தீர்த்து வைக்கும் என்று தெரிகிறது. ஆம், ஐபேட்-3யில் மைக்ரோஎஸ்டி ஸ்லாட்டுடன் வர இருக்கிறது.

7. ஐபேட்-3 யில் நீடித்த ஆற்றலை வழங்க வல்ல அளவில் மிகசிறிய பேட்டரி பொருத்தப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் அதிக ஆற்றல் கொண்ட இந்த பேட்டரியின் விலை தற்போதைய பேட்டரிகளைவிட 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. கம்ப்யூட்டர்களில் பயன்படும் நவீன தண்டர்போல்ட் தொழில்நுட்பம் ஐபேட்-3யில் அப்லோடு செய்யப்பட்டு வர இருக்கிறது. இதனால், கேபிள் வழியாக ஹைடெபினிஷன் கொண்ட சினிமாவை வெறும் 30 வினாடிகளுக்குள் ஐபேட் மூலம் பரிமாற்றம் செய்ய முடியும்

Thursday, September 15, 2011

நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மைக்ரோமேக்ஸ் ஏ-85



நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய சூப்பர் போனை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஏ-85 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சூப்பர் போன் வடிவமைப்பிலும் அசத்துகிறது.3.8 டிஎஃப்டி டச் ஸ்கிரீனுடன் மின்னுகிறது ஏ-85. 480 X 800 பிக்ஸல் ஸ்டேன்டர்டு டிஸ்ப்ளேயை ஏ-85 கொண்டுள்ளது. அதோடு 246 பிபிஐ பிக்ஸல் டென்சிட்டியை சப்போர்ட் செய்கிறது. சென்சார் ஆட்டோ டர்ன் ஆஃப் மற்றும் சென்சார் யூஐ ஆட்டோ ரொட்டேட் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

8 ஜிபி வரை ஸ்டோரேஜ், 512 எம்பி ரேம் வசதி உள்ளது. இதனை 32 ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். ஓஎஸ் கான்ஃபிகிரேஷன் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது சூப்பர் போன் நிஜமாகவே சூப்பர் தான்.இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் சிறந்த முறையில் செக்யூர்டு செய்யப்பட்டுள்ளது.

தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டுமா இதோ இருக்கவே இருக்கிறது புளூடூத் வசதி.வேகமான தகவல் பரிமாற்ற செயல்பாட்டிற்கு வைபை வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. எட்ஜ் டெக்னாலஜி கொண்டு ஜிபிஆர்எஸ் சவுகரியமும் இதில் தரப்பட்டுள்ளது.

இதில் 1ஜிஹெசட் என்விஐடிஐஏ டெக்ரா 2 டியூல் கோர் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஓஎஸ் வர்ஷன் ஃப்ரையோ 2.2 வழங்கப்பட்டுள்ளது. வீடியோ ரெக்கார்டிங் வசதிக்காக720 பி ஹெச்டி,5எம்பி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

அட்வான்ஸ்டு இமேஜ் ஆட்டோ ஃபோக்கஸ்,ஜியோ டேக்கிங் போன்ற வசதிகளையும் எந்த வித சிரமமும் இல்லாமல் பெறலாம். இந்த மைக்ரோமேக்ஸ் ஏ85 மாடல் ரூ.15,000 இருந்து ரூ.18,000 வரை இதன் விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







Wednesday, September 14, 2011

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் சாம்சங் போன்கள்


புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்பட்டுத்திக் கொண்டிருக்கிறது சாம்சங் நிறுவனம். இந்த முறை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. சாம்சங் ஃபோகஸ் எஸ் மற்றும் ஃபோகஸ் ஃப்ளாஷ் என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டு மாடல்களிலுமே வின்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு வின்டோஸ் போன் மேங்கோ என்றும் பெயர் உண்டு. சாம்சங் போக்கஸ் எஸ் மாடலில் 1ஜிஎச்இசட் ஸ்கார்பியன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஆன்ட்ரோ 200 ஜிபியூ மற்றும் க்யூவல்காம் க்யூஎஸ்டி8250 ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியைப் பெறமுடியும்.

அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் 4 இஞ்ச் திரை வசதி கொண்டுள்ளது. சூப்பர் அமோல்டு மல்டி டச் ஸ்கிரீன் வசதியும் இதில் உள்ளது. சாம்சங் மாடலில் 8 மெகா பிக்ஸல் கொண்ட சிறந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகவும் தெளிவான படத்தைப் பெறமுடியும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இதில் 3.2 பிக்ஸல் கொண்ட முகப்புக் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

சாம்சங் ஃபோக்கஸ் ஃப்ளாஷ் மாடலில் 5 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா உள்ளது. ஃபோக்கஸ் எஸ் மாடலை விட ஃபோக்கஸ் ஃப்ளாஷ் மாடலில் உள்ள கேமராவின் பிக்ஸல் குறைவுதான், இருப்பினும் துல்லியமான படங்களை எளிதில் பெற முடியும். இதில் உள்ள 7.5 வின்டோஸ் மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் 1.4 ஜிஎச்இசட் பிராசஸருக்கு சப்போர்ட் கொடுக்கிறது.

இந்த இரண்டு மாடல்களிலுமே ரிமூவபில் பேட்டரிப் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் ச்சேட், ம்யூக், பார்-கோட் ஸ்கேனர், போட்காஸ்ட் ப்ளேயர், வைபை, ஜிபிஎஸ், போன்ற வசதிகளும் இந்த ஹேண்ட்செட்டில் உள்ளன. சாம்சங் ஃபோக்கஸ் எஸ் மாடல் ரூ.25,000 விலைக்கும், ஃபோக்கஸ் ப்ளாஷ் மாடல் ரூ.20,000 விலைக்கும் எதிர் பார்க்கப்படுகிறது.








Friday, September 9, 2011

பட்டையகிளப்பும் ஏஸர் பெராரி மொபைல்கள்



ஏஸர் லிக்யுட் மினி பெராரி மொபைல்கள் ஒரு வருடத்திற்கு முன்பாக வந்தது. இப்போது பல புதிய தொழில் நுட்பங்களுடன் புதுப் பொலிவுடன் ஏஸர் லிக்யுட் மினி பெராரி என்ற பெயரில் மீண்டும் வருகிறது. ஒரிஜினல் பெராரியாஸ் சான்றிதழ் பெற்ற இந்த புதிய ஏஸர் லிக்யுட் மினி பெராரி மொபைல்கள் இந்தியாவிற்கு விரைவில் வந்துவிடும் என நம்பலாம்.

ஏஸர் லிக்யுட் மினி பெராரியின் எடை 105 கிராம்களாகும். இது சிவப்பு வண்ணத்துடன் பெராரியின் சின்னம் தாங்கி தனது ரசிர்களை அசத்த வருகிறது. பில்ட்-இன் வசதிகளான பெராரியின் ஆட்டோமொபைல் வால்பேப்பர்கள் மற்றும் ஏராளமான படங்கள் மற்றும் பெராரி எந்திரங்களின் ஒலிகள் அகியவை உள்ளன. 


அதி விரைவான செயல்பாட்டிற்காக க்வல்காம் ஸ்நாப்ட்ராகன் எம்எஸ்எம்227-1 சிப்செட்டுடன் 600 மெகா ஹர்ட்ஸ் க்லாக் வேகத்தில் இயங்கக்கூடிய எஆர்எம் 11 ப்ராஸஸருடன் வருகிறது. மேலும் அட்ரினோ 200 க்ராபிக்ஸ் அக்ஸிலரேட்டர் இந்த மொபைலுக்கு மேலும் பெருமை சேர்க்கும். இதன் 512 எம்பி ராம் அசைக்க முடியாத உறுதியை இந்த மொபைலுக்குத் தரும்.
இதன் ராம் மற்றும் ப்ராசஸர் அகியவை அப்டேட் செய்யப் படாதவையா இருந்தாலும் இதன் ஆண்டராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீட் ஓஎஸ் மற்ற எல்லா குறைகளையும் மறைத்து விடும். ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் உண்மையாகவே சொத்தக்களாக இருக்கின்றன. அந்த வகையில் இந்த மொபைல் அந்த சொத்துக்களை அள்ளித்தரும் மாயாவியாக இருக்கும் என நம்பலாம்.




ஏஸர் லிக்யுட் மினி பெராரியின் ரியர் கேமரா 5 மெகா பிக்ஸல் ஆகும். ஆனால் இதில் ப்ளாஷ் கிடையாது. மேலும் இதில் 720பி ரிசலூசன் வரை எச்டி வீடியோக்களை ரிக்கார்ட் செய்யும் வீடியோ ரிக்கார்டிங் வசதி இல்லை. ஆனால் தரமான தெளிவாக வீடியோக்களை ரிக்கார்ட் செய்யலாம்.

மேலும் இது நவீன ஏஸர் யுஐ 4.2 கொண்டிருப்பதால் இதன் யூசர் இன்டர்பேஸ் மிக லகுவாக இருக்கும். மினி பெராரியின் திரை பழைய பெராரியின் அளவை விட சிறியதாகும். மினி பெராரியின் ரிசலூசன் 320 x 480 பிக்ஸல்களாகும்.

ஆனால் பிக்ஸிலின் அடர்த்தி 229 பிபிஐ கொண்டுள்ளதால் இதன் டிஸ்ப்ளே மிகத் தரமாக இருக்கும். மேலும் மினி பெராரி மைக்ரோ எஸ்டி கார்டுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும். அதாவது இது 8ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டுடன் பெராரியின் ப்ளூடூத் ஹெட்செட்டை வழங்குகிறது.ஆக நிறைந்த சகல அம்சங்களுடன் வரும் இந்த மினி பெராரி மலிவு விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...