onlne

Wednesday, September 28, 2011

பட்டையை கிளப்பும் டெல் XCD -35



டெல் எக்ஸ்சிடி-35 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது டெல் நிறுவனம். இதன் வடிவமைப்பு நிச்சயம் வாடிக்கையாளர்களை வாங்கத்தூண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது ஆன்ட்ராய்டு வசதி கொண்ட ஸ்மார்ட்போன்.

இந்த டெல் எக்ஸ்சிடி-35 மொபைல் 3.5 டிஎப்டி டச் ஸ்கிரீன் திரை கொண்டது. இதில் ஏஆர்எம் 11 600 எம்எச்இசட் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 3.2 எம்பி கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மொபைல் நிச்சயம் திருப்திகரமான புகைப்படத்தைக் கொடுக்கு்ம் என்று நம்பப்படுகிறது.

இந்த மொபைல் 3ஜி வசதிக்கு சப்போர்ட் செய்யும். டெல் எக்ஸ்சிடி-35 மொபைலில், வைபையின் மூலம் நெட் வசதியினைப் பெற முடியும். இதில் ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி வசதியும் உள்ளது.








இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ள யூஎஸ்பி வசதியினால் கணினியில் இருந்து தகவல்களைப் போனுக்கு எளிதாக பரிமாற்றம் செய்ய உதவுகிறது. இதில் டபிள்யூஏபி வசதியும் உள்ளது. இதன் மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 16 ஜிபி மெமரியைப் பெற முடியும். தகவல்களை எளிதாகப் பரிமாறிக் கொள்ள இதில் புளூடூத் வசதியும் உள்ளது. இந்த மொபைல் 200 எம்பி இன்டர்னல் மெமரியையும் வழங்குகிறது.

இது எட்ஜ் தொழில் நுட்பம் கொண்டது. இதன் எப்எம் ரேடியோ வசதியினைக் கேட்டு மகிழலாம். இதில் ஆடியோ மற்றும் வீடியோ வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.இந்திய சந்தையில் மதிப்பு ரூ.9,500 இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, September 25, 2011

4 சிம் கார்டு பொருத்தும் வசதியுடன் வரும் டெக்னோ மொபைல்

நான்கு சிம் கார்டுகளை பொருத்தும் வசதி கொண்ட மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது டெக்னோ நிறுவனம்.

4 சிம்களைக் கொண்ட மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது டெக்னோ நிறுவனம். இரண்டு சிம்களைப் பயன்படுத்திய காலம் போய் இப்பொழுது புதிய 4 சிம் கொண்ட புதிய மொபைல் வர இருக்கிறது. டி-4 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் அடுத்த மாதம் நெய்ரோபியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இந்த தகவலை டெக்னோ நிறுவன மார்கெட்டிங் மேனேஜர் திரு.ஆடம் ஜின் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். நோக்கியா, சாம்சங் போன்ற மொபைல் நிறுவனங்களுக்கு டெக்னோ மொபைலின் இந்த புதுமை சற்று கலக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் வசதியான வாய்ப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அனைத்து நிறுவனங்களும் டியூவல் சிம் வசதி கொண்ட மொபைலை தயாரித்து வெற்றி கண்ட நேரத்தில் சில நிறுவனங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட சிம்களை உருவாக்குவது பற்றி யோசித்திருப்பது மிகவும் அரிய விஷயமாகத் தோன்றுகிறது.

அந்த வகையில் டெக்னோ நிறுவனமும் இந்த பெருமைக்கு உரியதாகத் தெரிகிறது. இந்த மொபைல் முதலில் கென்யன் மார்கெட்டில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்திய சந்தையில் ரூ.15,000 விலையில் இருந்து தொடங்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது

Wednesday, September 21, 2011

மல்டி டச் ஸ்கிரீன் வசதியுடன் வரும் வியூவ்சோனிக் போன்









ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் மொபைலை வெளியிட உள்ளது வியூவ்சோனிக் நிறுவனம். இந்த மொபைல் மாடலில் 1 ஜிகாஹெர்ட்ஸ் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் சிங்கிள் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. வேகமாக செயல்படுவற்கு இது உதவுகிறது.

இந்த மாடல் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.2 பிரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது. இது 4.3 இஞ்ச் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டபிள்யூ மல்டி டச் ஸ்கிரீன் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 800 X 480 பிக்ஸல் கொண்டதாக இருக்கும். இதில் 512 எம்பி ரேம் வசதி உள்ளது.

இதன்மூலம், துல்லியமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்க முடியும். இதில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோவை ஆப்பரேட் செய்வது மிகவும் எளிதான ஒன்றாகும். எம்பி 4, எம்பி 3, டபிளயூஎம்ஏ, டபிள்யூஏவி போன்ற மீடியா பார்மெட்களை சப்போர்ட் செய்கிறது.

வியூசோனிக் வி-430 மொபைலில் விஜிஏ செகன்டரி முகப்பு கேமராவும், 5 மெகா பிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இது மிகவும் தெளிவான புகைப்படத்தைக் கொடுக்கிறது. இதன் மூலம் 3 ஜி கம்பாட்டிபிலிட்டி வசதியும் கிடைக்கிறது.

எளிதான முறையில் நெட் வசதியினைப் பெற வைபை, ஜிபிஎஸ், வி2.1 ஏ2டிபி புளூடூத் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் யூஎஸ்பி வசதியினைப்பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் இதில் யூஎஸ்பி வசதி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அனைவரையும் கவரும் வகையில் இதன் விலை இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.







Monday, September 19, 2011

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 3ம் தலைமுறை ஆப்பிள் ஐபேட்


ஆப்பிள் நிறுவனம் வடிவமைக்கும் அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெறுவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து வரும் ஆப்பிள் ஐபேட்-3 பற்றிய தகவல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட்டில் உலவி வருகின்றன.

கடைசியாக ஆப்பிள் ஐபேட்-3 ன் வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்கள் குறித்து சில பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது வெளியாகியுள்ள வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்களை காணலாம்.

1. இரண்டு மாடல்களில் ஐபேட்-3யை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில், ஒன்று 9.7 இஞ்ச் திரை கொண்டதாகவும், மற்றொன்று 7 இஞ்ச் திரையை கொண்டதாகவும் இருக்கும்.

2. இதுவரை இல்லாத வகையில் ஹைடெபினிஷன் மற்றும் கிராபிக்ஸ் வீடியோக்களை சப்போர்ட் செய்யும் அதிக துல்லியம் கொண்ட 'ரெட்டினா' டிஸ்ப்ளேயை கொண்டதாக ஐபேட்-3 வருகிறது.

3. ஆப்பிள் ஐபேட்-3 யில் 4 பிராசஸர்கள் கொண்ட ஏ-6 கோர் பிராசஸர் பொருத்தப்பட இருப்பதாக முன்பு கூறப்பட்டது. இது தற்போதைய ஐபேட்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஏ-5 பிராசஸர்களைவிட 30 சதவீதம் வேகமாகவும், 50 சதவீதம் அளவுக்கு பேட்டரியை மிச்சப்படும் ஆற்றல் கொண்டவையாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அந்த பிராசஸரை தயாரிக்கும் பணிகள் முழுமை பெறாததால், மற்ற ஐபேட்களில் பொருத்தப்பட்டிருக்கும் 2 பிராசஸர்கள் அடங்கிய ஏ-5 கோர் பிராசஸருடன் ஆப்பிள் ஐபேட்-3 வர இருப்பதாக கூறப்படுகிறது.

4. தற்போதைய ஐபேட்களின் முகப்பில் வீடியோ காலிங் வசதிக்கான விஜிஏ முகப்பு கேமராவும், பின்புறத்தில் 720பிக்ஸல் துல்லியத்தில் வினாடிக்கு 30 பிரேம்களில் வீடியோ எடுக்கும் திறன் கொண்ட கேமராவும் பொருத்தப்பட்டிருந்தது.
ஆனால், ஐபேட் வாடிக்கையாளர்கள் கேமராவின் திறன் பற்றி குறை கூறியது ஆப்பிள் நிறுவனத்தின் காதுக்கும் எட்டியிருக்கிறது. எனவே, ஐபேட்-3 யில் ப்ளாஷ் வசதியுடன் கூடிய ஆற்றல்வாய்ந்த 8 மெகாபிக்ஸல் கேமராவுடன் அறிமுகப்படுத்த உள்ளது ஆப்பிள்.

5. இவை எல்லாவற்றையும் விட ஐபேட்-3 யில் என்எப்சி சிப் பொருத்தப்பட்டு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்று ஐபேட்-3யை பயன்படுத்தி கடைகளில் பொருட்கள் வாங்க முடியும் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

6. ஐபேட்-2 வில் பெரும் குறையாக இருப்பது சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளும் வகையில் மெமரி கார்டு பொருத்துவதற்கான ஸ்லாட் இல்லாதது. ஆனால், இந்த குறையை ஐபேட்-3 தீர்த்து வைக்கும் என்று தெரிகிறது. ஆம், ஐபேட்-3யில் மைக்ரோஎஸ்டி ஸ்லாட்டுடன் வர இருக்கிறது.

7. ஐபேட்-3 யில் நீடித்த ஆற்றலை வழங்க வல்ல அளவில் மிகசிறிய பேட்டரி பொருத்தப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் அதிக ஆற்றல் கொண்ட இந்த பேட்டரியின் விலை தற்போதைய பேட்டரிகளைவிட 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. கம்ப்யூட்டர்களில் பயன்படும் நவீன தண்டர்போல்ட் தொழில்நுட்பம் ஐபேட்-3யில் அப்லோடு செய்யப்பட்டு வர இருக்கிறது. இதனால், கேபிள் வழியாக ஹைடெபினிஷன் கொண்ட சினிமாவை வெறும் 30 வினாடிகளுக்குள் ஐபேட் மூலம் பரிமாற்றம் செய்ய முடியும்.







நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 3ம் தலைமுறை ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் நிறுவனம் வடிவமைக்கும் அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெறுவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து வரும் ஆப்பிள் ஐபேட்-3 பற்றிய தகவல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட்டில் உலவி வருகின்றன.

கடைசியாக ஆப்பிள் ஐபேட்-3 ன் வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்கள் குறித்து சில பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது வெளியாகியுள்ள வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்களை காணலாம்.

1. இரண்டு மாடல்களில் ஐபேட்-3யை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில், ஒன்று 9.7 இஞ்ச் திரை கொண்டதாகவும், மற்றொன்று 7 இஞ்ச் திரையை கொண்டதாகவும் இருக்கும்.

2. இதுவரை இல்லாத வகையில் ஹைடெபினிஷன் மற்றும் கிராபிக்ஸ் வீடியோக்களை சப்போர்ட் செய்யும் அதிக துல்லியம் கொண்ட 'ரெட்டினா' டிஸ்ப்ளேயை கொண்டதாக ஐபேட்-3 வருகிறது.

3. ஆப்பிள் ஐபேட்-3 யில் 4 பிராசஸர்கள் கொண்ட ஏ-6 கோர் பிராசஸர் பொருத்தப்பட இருப்பதாக முன்பு கூறப்பட்டது. இது தற்போதைய ஐபேட்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஏ-5 பிராசஸர்களைவிட 30 சதவீதம் வேகமாகவும், 50 சதவீதம் அளவுக்கு பேட்டரியை மிச்சப்படும் ஆற்றல் கொண்டவையாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அந்த பிராசஸரை தயாரிக்கும் பணிகள் முழுமை பெறாததால், மற்ற ஐபேட்களில் பொருத்தப்பட்டிருக்கும் 2 பிராசஸர்கள் அடங்கிய ஏ-5 கோர் பிராசஸருடன் ஆப்பிள் ஐபேட்-3 வர இருப்பதாக கூறப்படுகிறது.

4. தற்போதைய ஐபேட்களின் முகப்பில் வீடியோ காலிங் வசதிக்கான விஜிஏ முகப்பு கேமராவும், பின்புறத்தில் 720பிக்ஸல் துல்லியத்தில் வினாடிக்கு 30 பிரேம்களில் வீடியோ எடுக்கும் திறன் கொண்ட கேமராவும் பொருத்தப்பட்டிருந்தது.
ஆனால், ஐபேட் வாடிக்கையாளர்கள் கேமராவின் திறன் பற்றி குறை கூறியது ஆப்பிள் நிறுவனத்தின் காதுக்கும் எட்டியிருக்கிறது. எனவே, ஐபேட்-3 யில் ப்ளாஷ் வசதியுடன் கூடிய ஆற்றல்வாய்ந்த 8 மெகாபிக்ஸல் கேமராவுடன் அறிமுகப்படுத்த உள்ளது ஆப்பிள்.

5. இவை எல்லாவற்றையும் விட ஐபேட்-3 யில் என்எப்சி சிப் பொருத்தப்பட்டு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்று ஐபேட்-3யை பயன்படுத்தி கடைகளில் பொருட்கள் வாங்க முடியும் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

6. ஐபேட்-2 வில் பெரும் குறையாக இருப்பது சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளும் வகையில் மெமரி கார்டு பொருத்துவதற்கான ஸ்லாட் இல்லாதது. ஆனால், இந்த குறையை ஐபேட்-3 தீர்த்து வைக்கும் என்று தெரிகிறது. ஆம், ஐபேட்-3யில் மைக்ரோஎஸ்டி ஸ்லாட்டுடன் வர இருக்கிறது.

7. ஐபேட்-3 யில் நீடித்த ஆற்றலை வழங்க வல்ல அளவில் மிகசிறிய பேட்டரி பொருத்தப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் அதிக ஆற்றல் கொண்ட இந்த பேட்டரியின் விலை தற்போதைய பேட்டரிகளைவிட 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. கம்ப்யூட்டர்களில் பயன்படும் நவீன தண்டர்போல்ட் தொழில்நுட்பம் ஐபேட்-3யில் அப்லோடு செய்யப்பட்டு வர இருக்கிறது. இதனால், கேபிள் வழியாக ஹைடெபினிஷன் கொண்ட சினிமாவை வெறும் 30 வினாடிகளுக்குள் ஐபேட் மூலம் பரிமாற்றம் செய்ய முடியும்

add button

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...